அம்பேத்கர் சிலைக்கு காவி துண்டு! காஞ்சிபுரத்தில் பரபரப்பு! மர்ம நபர்கள் விஷம செயல்!
காஞ்சிபுரத்தில், சட்ட மேதை அம்பேத்கார் சிலைக்கு மர்ம நபர்கள் சிலர் காவி துண்டு அணிவித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷம செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டம் மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் வாயில் முன்பு உள்ள அம்பேத்கர் சிலைக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர், காவி துண்டு அணிவித்து விட்டு சென்றுள்ளனர். இதனை அறிந்து அப்பகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மின்சார வாரிய அலுவலகம் முன்பு குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தகவலறிந்து வந்த காஞ்சிபுரம் போலீசார், அம்பேத்கர் சிலைக்கு காவித் துண்டு போர்த்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சமாதானம் செய்த நிலையில் உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போலீசாருடன் தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
அப்பகுதியில் ஏதேனும் அசாம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுப்பதற்கும் ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர், பதற்றம் தணிந்தது. காவி துண்டு போர்த்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?