1ம் வகுப்பு முதல் கல்லூரி வரை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை! விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

 
மாணவர்கள்

1ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு பயிலும் கல்லூரி மாணவர்கள் வரை உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக்கோங்க. சிறுபான்மையின மாணவர்களுக்கு ஏராளமான சலுகைகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் கல்வி நிறுவனங்களில் 1 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணாக்கர்களுக்கு கல்வி ஊக்கத்தொகையும். 11ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயில்பவர்கள் மற்றும் தொழில்/ தொழில்நுட்ப கல்வி பயில்பவர்கள் போன்றவர்களுக்கு பெற்றோர்கள் ஆண்டு வருமான அடிப்படையில் கல்வி ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் இஸ்லாமியா், கிறிஸ்துவா், சீக்கியா், புத்த மதத்தினா், பாா்சி மற்றும் ஜெயின் மதத்தைச் சோ்ந்த மாணவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ்,மாணவர்களின் பேங்க் அக்கவுண்டுக்கு நேரடியாக ஊக்க தொகை செலுத்தப்படும். 

#BREAKING: சென்னை உட்பட 17 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!!

இது குறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அரசு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்களில் பயிலும் சிறுபான்மையினத்தை சேர்ந்த மாணவர்களுக்கு 2022 – 2023ம் கல்வியாண்டிற்கான கல்வித்தொகை வழங்கப்படவுள்ளது. இதில் 1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களும், ஆராய்ச்சி படிப்பு வரை பயிலும் கல்லூரி மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் மாணவிகள் தேர்வு விடுமுறை பள்ளி இளமை வெற்றி உற்சாகம்

மேலும் தகுதியும் விருப்பமும் உள்ள மாணவர்கள் அரசின் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தற்போது விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி கல்வி உதவித்தொகைக்கு அக்டோபர் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் விண்ணப்பிப்பது குறித்த சந்தேகங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web