மாணவியை மிரட்டி, பாலியல் தொல்லை! நண்பர்களுக்கும் விருந்தாக்கி, பணம் வசூலித்த கொடூரம்!

 
6 பேர் கைது

பத்தாம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவியை மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்ததோடு நில்லாமல், மிரட்டி, ஆண் நண்பர்களுக்கும் தொடர்ந்து விருந்தாக்கி, பணம் வசூலித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட மூன்று பேரையும் இவர்களுக்கு துணையாக இருந்தவர்களையும் போலீசார் கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி ஒருவர், அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு படித்து வருகிறாள். அவள், தனது தாய் மற்றும் தங்கையுடன் வாடகை வீட்டில் வசித்து வந்த மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் மாணவியை அவரது தாயார், அம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். 

மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவள் 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். அதை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் தாயார், மகளிடம் இது குறித்து கேட்டார். அதற்கு மாணவி, அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மற்றும் சிலர் தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். இதையடுத்து சிறுமியின் தாயார், ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் லதா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

கற்பழிப்பு பலாத்காரம் செக்ஸ் பாலியல் பெண்

திருமுல்லைவாயல் சரஸ்வதி நகர், தென்றல் நகர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (34). இவருக்கு 2 மனைவிகள். இருவருமே கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து சென்று விட்டனர். வெங்கடேசன், தனது தாயார் விஜயா (65), அக்காள் லலிதா (36) ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், வெங்கடேசன், 10ம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை கூறி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கு வெங்கடேசனின் தாயார் மற்றும் சகோதரியும் உடந்தையாக இருந்துள்ளது போலீசாரை அதிர செய்துள்ளது. 

இன்னும் கொடுமையாய், வெங்கடேசனின் அக்கா லலிதா, அவருக்குத் தெரிந்த வேறு 3 ஆண்களையும் வீட்டுக்கு வரவழைத்து மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்தியது தெரிய வந்துள்ளது. இதற்காக அந்த 3 ஆண்களிடமும் ரூ.3,500 பணத்தையும் லலிதா வசூலித்துள்ளார். இவர்கள் 4 பேரும் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததால் 16 வயது மாணவி கர்ப்பமானது தெரிந்தது. 

Avadi

இதையடுத்து வெங்கடேசன், அவருடைய அக்காள் லலிதா, அவர்களது தாயார் விஜயா (65) மற்றும் அதே பகுதி காந்தி தெருவை சேர்ந்த வேங்கப்பன் (42) ஆகிய 4 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். பின்னர் 4 பேரையும் திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள திருமுல்லைவாயல் சரஸ்வதி நகரை சேர்ந்த கிரி மற்றும் பட்டாபிராமை சேர்ந்த பாலாஜி ஆகிய 2 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

From around the web