பேருந்து படிக்கட்டிலிருந்து தவறி விழுந்து பள்ளி மாணவன் பலி!! தொடரும் சோகம்!!

 
யுவராஜ்

தமிழகத்தில் சமீபகாலமாக பள்ளி மாணவர்கள் பேருந்தில் செய்யும் அட்டகாசங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்த பள்ளி நிர்வாகங்களும், காவல்துறையும், பெற்றோர்களும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மாணவர்களின் அலப்பறைகள் சில நேரங்களில் விபரீதத்தில் முடிந்து விடுகின்றன. 

யுவராஜ்

சென்னையை அடுத்த நல்லம்பாக்கம் கலைஞர் தெருவில் வசித்து வந்த பள்ளி மாணவர் 16 வயது யுவராஜ் . இவர் மாம்பாக்கம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இன்று வழக்கம்போல் பள்ளிக்கு செல்ல புறப்பட்ட மாணவன், அதற்காக கண்டிகை பேருந்து நிலையத்தில் தாம்பரத்திலிருந்து கேளம்பாக்கம் நோக்கி சென்ற மாநகர அரசு பேருந்தில் ஏறியுள்ளார். 

பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் முன்பக்க படிக்கட்டில் தொங்கியபடி யுவராஜ் பயணம் செய்துள்ளார். அப்போது பேருந்து கண்டிகை எச்பி பெட்ரோல் பங்க் எதிரே  வந்தபோது திடீரென படிக்கட்டில் இருந்து மாணவன் யுவராஜ் தவறி கீழே விழுந்த நிலையில், பேருந்தின் பின் சக்கரத்தின் டயர், மாணவன் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

போலீஸ்

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாழம்பூர் போலீசார், யுவராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web