கல்லூரி பேருந்து மோதியதில் பள்ளி மாணவன் பலி!! பள்ளிக்காக காத்திருந்த போது பரிதாபம்!!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கார்கூடல்பட்டி அடுத்த செம்மண்காடு பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள தனியார் பள்ளியில் படித்த பிரபாகரன் பள்ளிப் பேருந்துக்காக காத்திருந்தார். இவர் 5ம் வகுப்பு படிக்கிறார்.
பள்ளி பேருந்துக்காக நிழல் கூடத்தில் காத்திருந்த போது அந்த வழியில் சென்ற தனியார் கல்லூரி பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததால் பிரபாகரன் நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில் சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளி பேருந்துக்காக காத்திருந்த சிறுவன் கல்லூரி பேருந்து மோதி உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?