பள்ளி மாணவர்கள் ஏரியில் மூழ்கி பலி!! மீன் பிடித்து கொண்டிருந்த போது பரிதாபம்!!

 
பிரதீஷ் அன்பரசு

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பாணாவரம் அருகே உள்ள பழையபாளையம் மோட்டூர் அஞ்சலக தெருவில் வசித்து வருபவர் கோவிந்தராஜ். கூலித்தொழிலாளியான இவருக்கு பிரதீஷ் (12) என்ற மகன் இருந்தார். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த துரைமுருகன் என்ற கூலித்தொழிலாளிக்கும் அன்பரசு (15) என்ற மகன் இருந்து வந்தார். 2 மாணவர்களும் நண்பர்களாக இருந்து வந்தனர்.

ஏரி
அரசுப் பள்ளியில் பயின்று வந்த 2 மாணவர்களும் நேற்று சுதந்திர தின விடுமுறையை கழிக்க அருகில் உள்ள ஏரிக்கரையில் அமர்ந்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று கால் தவறி 2 பேரும் ஏரியில் மூழ்கியுள்ளனர். இதை பார்த்து அதிர்சியடைந்த பொது மக்கள் கூச்சலிட்டு மற்றவர்களை உதவிக்கு அழைத்தனர்.இருவரையும் மீட்டு பிரதீஷ் மற்றும் அன்பரசனை பாணாவரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மாணவர்கள் 2 பேரையும் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்

ராணிப் பேட்டை

தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் தொடர்ந்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 2 மாணவர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web