நீச்சல் குளத்தில் மூழ்கி பள்ளி மாணவி பலி!! தோழி வீட்டுக்கு சென்ற போது பரிதாபம்!!!

 
நீச்சல்

சென்னை அம்பத்தூர் பானுநகர் பகுதியில் வசித்து வருபவர் பாலாஜி. இவர் பட்டரைவாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கண்மணி. இந்த தம்பதிக்கு தனன்யா (வயது 8) என்ற மகள் இருந்தார்.தனன்யா அதே பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தாள். தனன்யாவுடன் கனுஷ்யா என்ற மாணவி படித்து வந்தார். தோழிகளான இருவரும் ஒருவர் மீது நல்ல நட்பு பாராட்டி வந்தனர்.

நீச்சல்

இதனால் தனன்யாவின் தாயான கண்மணிக்கு கனுஷ்யாவின் தாயுடன் நட்பு ஏற்பட்டது. இதனால் அம்பத்தூர் பால்பண்ணை அருகே உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் கனுஷ்யாவின் தாய், கண்மணியை தனது வீட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.கனுஷ்யாவின் தாயுடைய அழைப்பை ஏற்ற கண்மணி, தனன்யாவுடன் நேற்று முன்தினம் மாலை அவரது வீட்டிற்கு சென்றார்.

சிறுவன் பலி

கண்மணி, கனுஷ்யாவின் தாயுடன் பேசிக்கொண்டிருந்த போது . சிறுமிகள் இருவரும் அங்கிருந்த நீச்சல் குளத்தில் குளித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் சிறுமி தனன்யா திடீரென்று நீச்சல் குளத்தில் மூழ்கினார். இதனால் பதறிப்போன அனைவரும், உடனடியாக தனன்யாவை மீட்டு வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், தனன்யா ஏற்கனவே நீரில் மூழ்கி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த அம்பத்தூர் எஸ்டேட் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமி மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 3ம் வகுப்பு பள்ளி மாணவி, தோழியின் வீட்டு நீச்சல் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web