கதறும் தமிழக விவசாயிகள்! செழிப்பாக வளர்ந்து நின்ற முள்ளங்கி! மொத்தமாக டிராக்டர் ஓட்டி நாசமாக்கிய கொடுமை!

 
முள்ளங்கி

ஏக்கர் முழுவதும் செழிப்பாக வளர்ந்து பார்ப்பதற்கே ரம்மியமாக நிற்கிறது அந்த முள்ளங்கி தோப்பு. சில நி மிட நேரம் தான். அத்தனையையும் கண் மூடி திறப்பதற்குள் டிராக்டர் ஓட்டி, அழித்து விட்டு கண்களில் நீர் கசிய விரக்தியாக பார்க்கிறார் இத்தனை நாட்களாக அவற்றைப் பயிரிட்டு வள்ர்த்த ராமமூர்த்தி. விவசாயிகள் விளைவிக்கும் பொருட்கள் சில நேரங்களில் விலை வீழ்ச்சி அடைவதுண்டு. தக்காளி சில நேரம் கிலோ ரூ1க்கு விற்பனையாகும் போது டன் கணக்கில் குப்பையில் கொட்டி அழிப்பார்கள். அறுவடைக்கான கூலியைக் கொடுக்க கூட விற்பனையாகும் விலை கிடைக்காததால், தோட்டத்திலேயே அறுவடை செய்யாமல் விட்டு வைக்கும் கொடுமை எல்லாம் நிகழ்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் விரக்திஅடைந்து விடுகின்றனர். அதே போல் ஒரு சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நிகழ்ந்துள்ளது. 

முள்ளங்கி

ஒசூர் ஆலூர் தின்னூர் கிராமத்தில் வசித்து வருபவர் ராமமூர்த்தி . இவர் பல வருடங்களாக  விவசாயம் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது  தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் முள்ளங்கி பயிர்களை பயிரிட்டிருந்தார்.

இவை நல்ல விளைச்சல் பெற வேண்டும் என்பதற்காக ஒரு ஏக்கருக்கு  ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்திருந்தார். ஆனால் தற்போது சந்தையில் ஒரு கிலோ முள்ளங்கி ரூ.18 முதல் ரூ.20க்கு விற்பனைச் செய்யப்பட்டு வரும் முள்ளங்கி, விவசாயிகளிடம் ஒரு கிலோ முள்ளங்கி ரூ.4 முதல் ரூ.5 வரையிலான விலையிலேயே கொள்முதல் செய்ய பேசப்படுவதாக கூறப்படுகிறது.

வயல்
முள்ளங்கி விலை வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து விரக்தியடைந்த விவசாயி ராமமூர்த்தி, தான் 2 ஏக்கரில் பயிரிட்டிருந்த முள்ளங்கிகளை டிராக்டர் கொண்டு உழுது மொத்தமாக அழித்து தள்ளினார். இது குறித்து ராமமூர்த்தியிடம் கேட்ட போது, ‘‘தற்போது சுமார் 15 டன் முள்ளங்கிகளை நான் டிராக்டர் கொண்டு அழித்து விட்டேன். இதைத் தொடர்ந்து இந்த நிலத்தில் அடுத்ததாக சந்தையில் நல்ல விலை போக உள்ள மலர்கள் அல்லது முட்டைகோஸ் உள்ளிட்ட பயிர்களை நடவு செய்ய உள்ளேன். இவற்றை அழிக்கும் போது, மனது பாரமாக தான் இருந்தது. ஆனால், இவற்றை பறிப்பதற்காக கூலிக்கு ஆட்களை வைத்து பறித்து, கிலோ 4 ரூபாய்க்கு நான் விற்பனை செய்தால், எனக்கு கூலி கொடுக்க கூடிய பணம் கூட கிடைக்காது’’ என்று கவலையுடன் தெரிவித்தார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web