கதறி துடித்த கர்ப்பிணி மனைவி!! மின்சாரம் தாக்கி இளைஞர் பலி!!

 
ஜெயராஜ்


திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பெத்லகேம் 7வது தெருவில் ஜெயராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் ஆம்பூர் நகராட்சியில் தூய்மை பணியாளராக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார். கடந்த 8 மாதங்களுக்கு முன்னர்தான் ஜெயராஜூக்கு திருமணமாகி உள்ளது. தற்போது இவரது மனைவி 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

மின்சாரம்

இந்நிலையில் ஜெயராஜ் தான் வாடகைக்கு குடியிருந்த வீட்டின் மாடியின் மீது வாளியில் வைத்திருந்த தண்ணீரை ஊற்றினார். அப்போது அருகே இருந்த உயர் மின்கம்பியில் இருந்து திடீரென மின்சாரம் ஜெயராஜ் மீது பாய்ந்தது. இதில் ஜெயராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயரிழந்தார்.இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் நகர போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெயராஜின் சடலத்தை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதர பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

திருப்பத்தூர்

ஒப்பந்த தூய்மை பணியாளரான ஜெயராஜூக்கு திருமணமாகி 8 மாதங்களே ஆன நிலையில் அவரது மனைவி 3 மாத கர்ப்பிணியாக இருக்கும் வேளையில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.இதைத்தொடர்ந்து மின்வாரிய ஊழியர்களும் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web