மகளை கண்டித்ததால் பெற்றோருக்கு அரிவாள் வெட்டு!! திண்டுக்கலில் பயங்கரம்!!

 
திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பச்சலா கவுண்டனூர் கிரமாத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி ராணி. இவர்களுக்கு உமா என்ற மகள் உள்ளார். இவரது மகள் உமாவுக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உமாவின் கணவர் இறந்துவிட்டார். இதனால் உமா தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

திண்டுக்கல்

இந்த நிலையில் உமாவிற்கும், தங்கச்சி அம்மாபட்டி கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக தெரிகிறது. இதற்கு உமாவின் தந்தை எதிர்ப்பு தெரிவித்ததால் ராஜேந்திரனுக்கும் காளிமுத்துவிற்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று ராஜேந்திரன் மற்றும் ராணி வீட்டில் இருந்தபோது அங்கு வந்த காளிமுத்து தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராஜேந்திரனை வெட்டினார். 

இதனை தடுக்க முயன்ற ராணிக்கும் வெட்டு விழுந்தது. இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கணவன் மனைவி இருவரையும் காப்பாற்றி, தப்பி ஓட முயன்ற காளிமுத்துவை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் காளிமுத்துவை கட்டி வைத்து தர்ம அடி கொடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

மேலும் ரத்த காயத்திலிருந்த ராஜேந்திரன் மற்றும் ராணியை மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

போலீஸ்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேடசந்தூர் டி.எஸ்.பி துர்காதேவி, இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் பொதுமக்கள் தாக்கியதால் காயமடைந்த காளிமுத்துவை மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
பட்டப்பகலில் வீடு புகுந்து தம்பதியை, வாலிபர் அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web