சேலத்தில் பரபரப்பு!! திமுக கவுன்சிலருக்கு அரிவாள் வெட்டு!!

 
திமுக கவுன்சிலர் வெங்கடாசலம்

மேட்டூர் அருகே திமுக கவுன்சிலரை மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த  குள்ளவீரன்பட்டி 14-வது வார்டு திமுக கவுன்சிலர் வெங்கடாசலம் கடந்த 30 ஆம் தேதி நகராட்சியில் நடைபெற இருந்த நகர் மன்ற கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக காரில் வந்துள்ளார்.  அப்போது அங்கு மறைந்திருந்த இரண்டு பேர் அவரை வீச்சருவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

திமுக கவுன்சிலர் வெங்கடாசலம்

இதையடுத்து படுகாயம் அடைந்த வெங்கடாஜலத்தை மீட்ட மேட்டூர் காவல்துறையினர் அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர்   மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வெங்கடாஜலத்தின் மனைவியும் 1வது வார்டு கவுன்சிலருமான உமா மகேஸ்வரி, மேட்டூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனிடையே  நேற்று மாலை மேட்டூர் அணையின் வலது கரை பகுதியில் மேட்டூர் காவல் ஆய்வாளர் சுப்பிரமணி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.

கைது

அப்போது இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், அவர்கள் 4 பேரும்  வெங்கடாசலத்தை கொலை செய்ய முயன்றவர்கள் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து நான்கு பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தபோது அவர்கள் பெயர் பிரபு, மணிவாசகம், ஜெயக்குமார், ராமச்சந்திரன் என்பவர் திமுக கவுன்சிலர் வெங்கடாஜலத்தை கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயற்சித்ததும்  தெரியவந்தது. இதனை அடுத்து   4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும்  தலைமறைவாக உள்ள     ரமேஷ், சச்சின்குமார்,  மகேஷ்,  பாண்டி, ஜீவா, திக்குவாயன் என்ற ஆறு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.  

From around the web