தோல்வியுடன் ஓய்வு பெற்றார் செரீனா வில்லியம்ஸ்! ரசிகர்கள் அதிர்ச்சி!

 
செரீனா ஓய்வு

தோல்வியுடன் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் செரீனா வில்லியம்ஸ். இறுதி போட்டியில் வெற்றியுடன் விளையாட்டில் இருந்து விடைபெறுவார் என்று டென்னிஸ் ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், செரீனாவின் தோல்வியைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் 3வது சுற்றில் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவின் அஜ்லா டோம்லஜனோவிக் ஆகியோர் மோதினர்.

இதில், ஆஸ்திரேலியாவின் அஜ்லா டோம்லஜனோவிக்கிடம் 7-5, 6-7, 6-1 என்ற செட் கணக்கில் செரீனா வில்லியம்ஸ் தோல்வியை தழுவினார். ஏற்கனவே மகளிர் இரட்டையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் தோல்வியடைந்த நிலையில் ஒற்றையர் பிரிவிலும் தோற்றுள்ளார்.

செரீனா வில்லியம்ஸ்

ஆட்ட முடிவில் கண்ணீர் விட்டபடி டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தார். இது பலரது ரசிகர்களுக்கு சோகத்தை தந்தது. செரீனா தனது கையில் அன்பு சின்னத்தை காட்டி கண்ணீர் விட்டபடி புறப்பட்டார். இதனால் 27 ஆண்டு கால டென்னிஸ் பயணத்தை செரீனா வில்லியமஸ் நிறைவு செய்தார்.

செரீனா ஓய்வு அறிவிப்பு

40 வயதாகும் செரீனா வில்லியம்ஸ் 4 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்கள் மற்றும் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். பல ரசிகர்கள் சமூகவலை தளங்களில் செரீனாவை பாராட்டி பல்வேறு பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web