சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை! மடாதிபதிக்கு காவல் நீட்டிப்பு!

 
சிவமூர்த்தி மடாதிபதி

சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மடாதிபதி சிவமூர்த்தி முருக சரணருவுக்கு காவல் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள முருக மடத்தின் சார்பில் தங்கும் விடுதியுடன் கூடிய பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இதனை சிவமூர்த்தி முருக சரணரு என்பவர் மடாதிபதியாக செயல்பட்டு வருகிறார். இந்த பள்ளியில் படிக்கும் இரண்டு மாணவிரிடம் பாலியலில் ஈடுபட்டதாக , கடந்த மாதம் ஆகஸ்ட் 27ம் தேதி, மடாதிபதி மீது பாலியல் புகார் கொடுத்தனர்.

பள்ளிச் சிறுமிகள் இருவா் அளித்த பாலியல் புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட கா்நாடக மாநில முருக மடத்தின் மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணருவை திங்கள்கிழமை (செப். 5) வரை போலீஸ் காவலில் சிறையில் அடைக்க உள்ளூா் நீதிமன்றம் கடந்த 2-ம் தேதி உத்தரவிட்டது. மேலும், சட்டத்தின்படி மடாதிபதியிடம் விசாரணையை மேற்கொள்ள போலீசாருக்கு முழுச் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாக மாநில முதல்வா் பசவராஜ் பொம்மை கூறினார்.

பாலியல் வன்கொடுமை

அதன்படி மடாதிபதியை தங்களது காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மடாதிபதியின் ரத்தம், தலைமுடி, சிறுநீரும் தடய அறிவியல் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே இன்று மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணருவை சித்ரதுர்கா மடத்திற்கு போலீசார் அழைத்து சென்று சோதனை நடத்தினர். மடாதிபதி பயன்படுத்திய அறை, கழிவறை, அலுவலகம், கூட்டம் நடைபெறும் இடத்தில் சோதனை நடத்தப்பட்டு இருந்தது.

பாலியல் வன்கொடுமை

இதையடுத்து அவரது நீதிமன்றக் காவல் இன்றுடன்(செப்.5) முடிவடைந்த நிலையில் மீண்டும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தொடர்ந்து சித்ரதுர்கா நீதிமன்றம் அவரது நீதிமன்றக் காவலை செப்டம்பர் 14ம் தேதி வரை நீட்டித்தது.  இதனிடையே, ஜாமீன் கோரி கர்நாடக நீதிமன்றத்தில் மடாதிபதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web