ஓடும் ஆட்டோவில் பாலியல் தொல்லை! கீழே குதித்து தப்பித்த இளம்பெண்!

 
ஆட்டோ பாலியல் இளம்பெண்

ஓடும் ஆட்டோவில் இருந்து பாலியல் தொல்லைக் காரணமாக இளம்பெண் ஒருவர் கீழே குதித்த சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதான இளம்பெண், கோவையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். 

இந்நிலையில், கடந்த 28ம் தேதி பணியின் காரணமாக திருப்பூர் சென்று விட்டு, மீண்டும் அன்றைய தினம் நள்ளிரவு கோவைக்கு திரும்பினார். ஹோப் காலேஜ் பேருந்து நிறுத்தம் முதல் செல்வபுரம் வரை செல்வதற்காக செயலி மூலமாக ஆட்டோ ஒன்றை பதிவு செய்து, அதன் பின்னர் வந்த ஆட்டோவில் ஏறி பயணித்தார். ஆட்டோவை, உக்கடம் அருள் நகரை சேர்ந்த முகமது சாதிக் (43) என்பவர் ஓட்டி வந்திருந்தார். 

ஆட்டோ பாலியல் இளம்பெண்

ஆட்டோ கோவை அவிநாசி சாலையில் சென்று கொண்டிருந்த போது ஆட்டோ ஓட்டுநர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். ஆட்டோ ஓட்டுநரின் எதிர்பாராத இந்த செயலினால் கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண் கூச்சலிட்டபடி ஓடும் ஆட்டோவில் இருந்து உடனடியாக கீழே குதித்தார். ஓடும் ஆட்டோவில் இருந்து இளம்பெண் கத்தியபடியே கீழே குதித்ததைக் கண்டு, வண்டியை நிறுத்தாமல் பயந்து,  ஆட்டோ ஓட்டுநர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

இளம் நடிகர் கைது

வேகமாக சென்றுக் கொண்டிருந்த ஆட்டோவில் இருந்து கீழே குதித்ததில் படுகாயமடைந்த அந்த பெண் தனது தோழிகளுக்கு இது குறித்து உடனடியாக தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த அவரது  தோழிகள், இளம்பெண்ணை மீட்டு விமான நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவிக்காக சேர்த்தனர். பின்ன, இளம்பெண்  ஆட்டோ ஓட்டுநரின் இந்த செயல் குறித்து காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். போலீசாரின் விசாரணைக்குப் பின்னர், ஆட்டோ ஓட்டுநர் முகமது சாதிக்(43) கைது செய்து சிறையில் அடைத்தனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web