ஓடும் காரில் பெண்ணிற்கு பாலியல் தொல்லை.! பலியான 10 மாத குழந்தை!!

 
பெற்ற தாயே  மகளை  பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடுமை!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஓடும் காரில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றது மட்டுமின்றி அந்த பெண்ணின் 10 மாத குழந்தையை காரில் இருந்து தூக்கி வீசி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள மும்பை-அகமதாபாத் தேசிய நெடுஞ்சாலையில்   இளம் பெண் ஒருவர் தனது 10 மாத பெண் குழந்தையுடன் போஷிரி என்ற பகுதிக்கு செல்ல சாலையில் வாகனத்திற்காக காத்திருந்துள்ளார். இந்த இளம் பெண்ணிடம் அவருடைய 10 மாத கைக்குழந்தையும் இருந்துள்ளது.

கற்பழிப்பு பலாத்காரம் செக்ஸ் பாலியல் பெண்

அப்போது அங்கு வாடகை கார் ஒன்று அந்த பெண் செல்ல வேண்டிய பகுதி நோக்கி சென்றுள்ளது. அதில் வேறு சில பயணிகளும் இருந்துள்ள நிலையில், ஷேர் செய்து அதில் பயணிக்க முடிவெடுத்து அந்த காரில் தனது கைக்குழந்தையுடன் அந்த பெண் ஏறியுள்ளார். கார் சிறிது தூரம் சென்ற நிலையில், ஓடும் காரிலேயே அந்த பெண்ணிடம் ஓட்டுனரும் சக பயணிகளும் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டுள்ளனர்.   இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டுள்ளார். இதனால் அந்த பெண்ணிடம் இருந்த 10 மாத குழந்தையை அந்த நபர்கள் ஓடும் காரில் இருந்து தூக்கி வெளியே வீசியுள்ளனர்.

சிறுவன் பலி

காரில் இருந்து சாலையில் வீசப்பட்ட குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.  அத்துடன் அந்த பெண்ணையும் ஓடும் காரில் இருந்து அவர்கள் கீழே தள்ளியுள்ளனர். இதில் பெண்ணுக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து பலத்த காயமடைந்த அந்த பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலிசார் முதல்கட்டமாக காரின் ஓட்டுனர் விஜய் குஷ்வாஹா என்பவரை கைது செய்துள்ளனர். மற்ற நபர்களை  பிடிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுப்பட்டுள்ளனர். தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது

From around the web