அதிர்ச்சி!! கூலிப்படை மூலம் காதலனை துவம்சம் செய்த காதலி!! திடுக்கிடும் பிண்ணனி!!

 
பிரவீன்

காதல் கைகூடாத  ஆத்திரத்தில் காதலியை ரயிலில் தள்ளி விடுவது, காதலனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்வது என இன்றைய தலைமுறை சீரழிந்து வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில்  புதுக்காதலனுடன் சேர்ந்து பழைய காதலனை கூலிப்படையை ஏவி போட்டு தாக்கியது பெரும் வைரலாகி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் வேர்க்கிளம்பி மாத்தார் பகுதியில் வசித்து வருபவர்  பிரவீன். இவர் டிப்ளமோ முடித்து விட்டு வெல்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசித்து வரும்  19 வயது கல்லூரி மாணவி ஜெஸ்லினை இன்ஸ்டா மூலம் பழகி காதலித்து வந்தார்.  ஜெஸ்லின் தனது வீட்டிற்கு வந்து பெண் கேட்கும் படி பிரவீனிடம் கூறினார். பிரவீனும் தனது பெற்றோர்களுடன் சென்று ஜெஸ்லின் வீட்டில் பெண் கேட்டதும் இரு வீட்டார் சம்மதத்துடன் 2 வருடம் கழித்து திருமணம் செய்து வைக்கலாம் என  முடிவு செய்தனர்.

அடித்துக் கொலை

இதன் பிறகு இருவரும் லிவிங் டு கெதர் வாழ்க்கை வாழத் தொடங்கினர். இந்நிலையில் ஜெஸ்லின் திடீரென கடந்த ஒரு மாதமாக பக்கத்து வீட்டில் வசித்து வந்த  ஜெனித்துடன் சுற்றத் தொடங்கினார். இதனை பிரவீன் கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த ஜெஸ்லின் தான் தற்போது ஜெனிதை காதலித்து வருவதாகவும் அவரைதான் திருமணம் செய்து கொள்ள போவதாகவும்  பிரவீனிடம் தெரிவித்தார். 


மனமுடைந்த பிரவீன் தான் கொடுத்த பரிசு பொருட்களை திரும்ப கேட்டுள்ளார். அனைத்தையும்  திரும்ப தருவதாக கூறி நேற்று முன்னாள் காதலன் பிரவீனை வேர்கிளம்பி பகுதிக்கு நேரில் அழைத்தார். வேர்கிளம்பி பகுதிக்கு வந்து கொண்டிருந்த போது 2 பேர் கொண்ட கூலிப்படை கும்பல் ஒன்று பிரவீனை தாக்கத் தொடங்கியது.இந்த காட்சிகளை  ஜெஸ்லின் புதிய காதலன் ஜெனித்துடன் அங்கு வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார். பிரவீனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் படுகாயமடைந்த பிரவீனை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.  

போலீஸ்

இச்சம்பவம் குறித்து  சிசிடிவி ஆதாரங்களுடன் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் காதலி ஜெஸ்லின், ஜெனித் மற்றும் தாக்குதல் நடத்திய நபர்கள் 2 பேர்  மீதும்  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தப்பியோடி தலைமறைவாக இருக்கும் அவர்களை  பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் காதலனை காதலியே கூலிப்படையை ஏவி தாக்குதல் நடத்தியது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்பதித்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web