அதிர்ச்சி! பயங்கர நிலநடுக்கம்! 146 க்கும் அதிகமானோர் காயம்!
தைவானில், உடற்பயிற்சி மையம் ஒன்று பயங்கர சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில், சீட்டுக்கட்டு சரிந்து விழுவதைப் போல நிலைகுலைந்து விழுந்தது. இந்த நிலநடுக்கத்தில் இது வரையில் 146 பேர் வரையில் படுகாயமடைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தைவானில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 மற்றும் 6.4 புள்ளிகளாக உணரப்பட்டுள்ளது. தைவானின் தென்கிழக்கு பகுதியில் பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. இதில், யூலி நகரின் அருகே 3 அடுக்குமாடி கட்டிடத்தின் 2 மேல் தளங்கள் அப்படியே சரிந்து விழுந்தன. கட்டிடம் மேலே விழுந்ததில் மின்கம்பங்களும் சாய்ந்தன.
இதே போல், யூலி நகரில் பாலம் இடிந்து விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர்கள் கீழே விழுந்தனர். தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உடனே அடுத்த சிறிது நேரத்தில் அதே பகுதியில் உள்ள சிஷங் பகுதியில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் டோங்லி ரயில் நிலைய கார் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த பல கார்கள் புரண்டன.
இந்த நிலநடுக்கம் குறித்து ஜப்பான் வானிலை மையம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தைவானை ஒட்டிய தென்பகுதி தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்திருந்தது. சில மணி நேரங்களுக்கு பிறகு அந்த எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் 146 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!