அதிர்ச்சி!! ஒரு மாதத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை 10% உயர்வு!!
தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடந்த மாதத்தை ஒப்பிடுகையில் 10% உயர்ந்துள்ளது. கண்ணுக்கு தெரியாமல் தினம் தினம் உயர்ந்து கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அனைத்து அத்தியாவசிய பெருட்களின் விலை 10% உயர்ந்துள்ளது. அதில் கடந்த மாதம் 108 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ துவரம்பருப்பு தற்போது 118 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மிளகாய்த்தூள் 40 ரூபாய் விலை அதிகரித்து கிலோ 400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இதேபோல் இந்தியாவின் பெரும் அடையாளமாக உள்ள மிளகு, மல்லி, சீரகம் உள்ளிட்ட மளிகை பொருட்களும் 10 சதவிகிதம் உயந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஒப்பிடுகையில் 25 கிலோ கொண்ட அரிசி சாக்குப்பை சராசரியாக 100 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. இது மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஜி.எஸ்.டியால் என்றும் பலர் வேதனை தெரிவிகின்றனர்.
ஆனால் அரசு ஆந்திராவில் இருந்து நெல் வரத்து மிகவும் குறைந்துவிட்டதே இதற்க்கு கரணம் என்றும், பொங்கல் வரை விலை குறைய வாய்ப்பே இல்லையென்றும் வியாபாரிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில் பாமாயில், சன் பிலோவேர் ஆயில் விலை லிட்டர்க்கு 30 ரூபாய் வரை குறைந்துள்ளது. ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக இறக்குமதில் ஏற்பட்ட தடை தற்போது நீங்கி இருப்பதாகவும் இதன் காரணமாக மேலும் விலை குறைய வாய்ப்பிருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்திருக்கின்றனர். அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கடந்த மாதத்தை ஒப்பிடுகையில் 10% உயர்ந்து இருப்பது சாமானிய மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.