அதிர்ச்சி!! போக்குவரத்து துறைக்கான சேவைக்கட்டணம் 10 மடங்கு உயர்வு?!! வாகன ஓட்டிகளே உஷார்!!

 
போக்குவரத்து


தமிழகத்தில் வீட்டு வரி, சொத்து வரி, மின் கட்டண உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையடுத்து பொதுமக்கள் பாதிக்காத வகையில் கட்டண உயர்வு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்தது.

இந்நிலையில், போக்குவரத்து சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது. கடந்த ஜூலை 25-ம் தேதி மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் செய்வதற்கான வரைவானது வெளியிடப்பட்டு, கருத்துக்களை தெரிவிக்க அவகாசம் வழங்கப்பட்டது. இந்த அவகாசம் முடிந்ததும் புதிய மோட்டார் வாகன கட்டணங்களை தமிழக அரசு அமல்படுத்த முடிவு செய்துள்ளது.

போக்குவரத்து தடை

அதன்படி போக்குவரத்து துறையில் உள்ள 10 சேவைகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. இந்த கட்டணங்கள் 10 மடங்கு வரை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில், வாகன சோதனை மையங்களுக்கான அங்கீகாரம் அளிக்கும் கட்டணம் ரூ. 1000-ல் இருந்து ரூ. 5 ஆயிரமாகவும், அங்கீகாரத்தை புதுப்பித்தல் கட்டணம் ரூ. 500-ல் இருந்து ரூ. 3 ஆயிரமாகவும், புதுப்பிப்பதற்கான தாமத கட்டணம் மாதம் ரூ. 200 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து ஆணையரின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு கட்டணம் ரூ. 500 ஆகவும், சிஎப்எக்ஸ் (CFX) நோட்டீஸ் திரும்பப் பெறும் கட்டணம் ரூ. 500 ஆகவும், தற்காலிகப் பதிவு மற்றும் தற்காலிகப் பதிவின் காலத்தை நீட்டிப்பு செய்தலுக்கான கட்டணம் ரூ.200 ஆகவும், பிற மண்டல வாகனங்களின் தகுதி சான்று அனுமதிக்கான கட்டணம் ரூ.500 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து

இதேபோல் ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட நகல் பெறுவதற்கான கட்டணம் ரூ.400 ஆகவும், தகுதி சான்றுக்கான நகல் கட்டணம் ரூ. 250 ஆகவும், மோட்டார் வாகன ஆய்வாளரின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு கட்டணம் ரூ. 500 ஆகவும் உயர்த்தபட உள்ளது. இதற்கான அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகலாம் என்று தெரிகிறது.

தமிழகத்தில் நிதி நெருக்கடியை சமாளிக்கும் நோக்கில் தான் போக்குவரத்து துறை சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. இந்த கட்டணம் 2006 - 2007 காலகட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட பிறகு தற்போது மாற்றம் செய்யப்பட உள்ளது. இருப்பினும் மோட்டார் வாகன வரி, எல்எல்ஆர், ஓட்டுனர் உரிமத்துக்கான கட்டணம் உள்ளிட்டவற்றில் மாற்றம் செய்யப்படவில்லை என்பது சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web