அதிர்ச்சி !! காரைக்குடி அருகே சாலை விபத்து 3 பேர் பலி! 4 பேர் படுகாயம்!!

 
விபத்து

காரைக்குடி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் திருச்சி பகுதியை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.திருச்சியில்   V 4  ஆடியோ என்ற பெயரில்  நிறுவனம் ஒன்று இயங்கிவருகின்றது.  இந்த நிறுவனத்தில் பணிபுரியும் மணிகண்டன் , ஜெயபால், அரவிந்த் உள்ளிட்ட பல  ஊழியர்கள்  தேவகோட்டை யில் நடைபெறும் ஆலய நிகழ்ச்சி ஒன்றிற்கு  ஆடியோ சிஸ்டம் போடுவதற்காக   ஆம்னி வேனில் சென்றுள்ளனர்.  இந்நிலையில் வேன் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்த ஆவுடைபொய்கை அருகே சென்று கொண்டிருந்த போது    எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை  இழந்து சாலை ஓரத்தில் இருந்த உயர் அழுத்த மின்கம்பியில் மோதி விபத்துக்குள்ளானது.   

இந்த விபத்தில் வேனில் வந்த மணிகண்டன் , ஜெயபால், அரவிந்த் என்ற மூன்று பேர் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தனர்.  மேலும் பலர்  படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து படுகாயமடைந்த  மணிமாறன், பாலாஜி, தினேஷ்,   அரவிந்த் என்பவர்களை மீட்ட அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனிடையே விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து குன்றக்குடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web