அதிர்ச்சி!! அடுத்தடுத்து வீசப்பட்ட 6 நாட்டு வெடிகுண்டுகள்!! அலறி அடித்து ஓடிய பொதுமக்கள்!!

 
வெடிகுண்டு

 

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டியில் இருந்து சுருளி அருவி சாலையில் இருக்கக்கூடிய குடியிருப்புப் பகுதியில் இன்று அதிகாலை மக்கள் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென்று டமார் என்று வெடிச் சத்தம் கேட்டுள்ளது‌. இதனால் உறங்கியவர்கள் எழுந்து சென்று வெளியே பார்த்தபோது சிலர் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளனர்.

ஜன்னல்

இதனால் பரபரப்பு ஏற்பட்டு அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் கூடினர். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசாருக்கு தகவல் தெரவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராயப்பன்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டு குழுவாக இளைஞர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. மேலும் திருமண விழாவில் பிளக்ஸ் போர்டு வைத்ததிலும் மோதல் ஏற்பட்டது, இதன் காரணமாக நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெடிகுண்டு வீசப்பட்ட பகுதியில் உள்ள வீட்டுக் கதவு, ஜன்னல், பூஜை அறை, சாக்கடை, சர்ச் வாசல் ஆகிய இடங்களில் 6 வெடிகுண்டுகள் வெடித்துக் கிடந்தது. போலீசார் அவற்றின் வெடித்த பாகங்களை கைப்பற்றி ஆய்வு செய்த போது அவை நாட்டு வெடிகுண்டுகள் என்று தெரிய வந்துள்ளது. தொடர்ந்து, இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web