அதிர்ச்சி!! வரதட்சணை கொடுமையால் 7 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை!!

 
7 மாத கர்ப்பிணி தற்கொலை

மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடி பகுதியை  சேர்ந்தவர் புஷ்பாதேவி. இவருக்கும் பூம்புகார் சாயானவனம் கிராமத்தை சேர்ந்த கார்த்திக். என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் 23ம் தேதி திருமணம் நடந்துள்ளது.  திருமணத்திற்காக கார்த்தில் வீட்டார்  மனபெண் வீடாரிடம்  12 பவுன் நகை வரதட்சணையாக  கேட்டுள்ளனர். அப்போது  அவர்கள் ஒப்புகொண்ட நிலையில் பின்னர்  புஷ்பாதேவி பெற்றோர் குறைவான நகை போட்டதாக கூறப்படுகிறது.

அதில் திருமணத்திம் போது 9 பவுன்நகை, பைக் மற்றும் சீர்வரிசை பொருட்களுடன் புஷ்பாதேவிக்கு திருமணம் செய்துவைத்துள்ளனர். அதன்பின்பு மீதி நகையை கேட்டு அவரது மாமியார் அகிலா, நாத்தனார் கவிதா, மாமனார் கலியபெருமாள் ஆகியோர் புஷ்பாதேவியை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 6 மாதம் கர்ப்பினியாக இருந்த புஷ்பாதேவி வீட்டில் தூக்குமாட்டி இறந்ததாக  புஷ்பாதேவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

 

உடனடியாக அவரது பெற்றோர்  மகள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது புஷ்பாதேவி கழுத்தில்காயங்கள் இருந்துள்ளதுஇதனையடுத்து தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதாகவும், வரதட்சணை கேடு மகளை கொலை செய்து விட்டதாக அவர்கள் பூம்புகார் போலீசில் புகார் அளித்துள்ளனர்இதனையடுத்து இறந்த புஷ்பாதேவியின்  உடலை கைப்பற்றி பூம்புகார் போலீசார்  இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web