அதிர்ச்சி!! மாற்றுத்திறனாளி மனைவி கையை வெட்டி துண்டாக்கிய கொடூர கணவன்!

குடும்ப தகராறு  காரணமாக  தனது  மனைவியை  அரிவாளால்  சரமாரியாக  வெட்டிய  கணவர்  காவல்  நிலையத்தில்  சரணடைந்தார்.

 
கொடூர கணவன்

சிவகங்கை மாவட்டம், கல்லூரி சாலை இந்திரா தெருயில் வசித்து வருபவர்  சக்திவேல். லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி நம்பீஸ்வரி. இவர் ஒரு மாற்றுத்திறனாளி. இந்த தம்பதிக்கு திவ்யஸ்ரீ என்கிற மகளும் வேல்பாண்டி என்கிற மகனும் உள்ளனர். இந்த நிலையில் மது பழக்கத்திற்கு அடிமையான சக்திவேல் அடிக்கடி மனைவி நம்பீஸ்வரியுடன் தகராறில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதே போல நேற்று மாலையும் வழக்கம்போல் மது அருந்தி விட்டு மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.

இருவருக்குள்ளும் வாக்குவாதம் அதிகரித்த நிலையில் ஆத்திரமடைந்த சக்திவேல் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மனைவி நம்பீஸ்வரியை சராமாரியாக வெட்டியுள்ளார். பின்னர் இவரின் கூச்சல் சத்தம் கேட்டு ஓடி வந்த  அக்கம் பக்கத்தினர்  நம்பீஸ்வரியைமீட்டு 108 ஆம்புலன்சில் ஏற்றி  சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த நம்பீஸ்வரிக்கு சிவகங்கை மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு  அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

இதற்கிடையில் சக்திவேல் நகர் காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சக்திவேலிடம் தீவர விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத்தகராறில் மது அருந்திய கணவன், மாற்றுத்திறனாளி மனைவியை அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில் 2 குழந்தைகளின் நிலைமைதான் பரிதாபத்திற்குரியதாக உள்ளது.

From around the web