அதிர்ச்சி!! அமித்ஷாவின் பாதுகாப்பு வளையத்திற்குள் நுழைந்த எம்பி செயலாளர் அதிரடி கைது!!

 
அமித்ஷா

 

ஆந்திராவில்  எம்.பி. ஒருவரின் தனிப்பட்ட செயலாளர் ஒருவர் . இவருக்கு வயது  32. இவர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தன்னை  பாதுகாப்பு அதிகாரியாகக் காட்டிக்கொண்டு, நெருங்கிப் பழக முயன்றார். இவர் செவ்வாய்கிழமை செப்டம்பர் 6ம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பாதுகாப்பு வளையத்துக்குள் நுழைந்ததாக ஹேமந்த் பவாரை கைது செய்துள்ளனர். ஆகஸ்ட் 30 ம் தேதி மகாராஷ்டிர முதல்வர் , மற்றும் துற்ணை முதல்வரை சந்திக்க அமித்ஷா அவரது இல்லங்களுக்கு சென்றிருந்தார். இதனையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன . அவர் 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார்

அமித்ஷா

இது குறித்து  காவல் உதவி ஆணையர் நில்கந்த் பாட்டீல் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் செப்டம்பர் 5ம் தேதி திங்கட்கிழமை அமித்ஷா மும்பைக்கு விஜயம் செய்தபோது கிர்கானைச் சுற்றியுள்ள போலீஸ் பந்தோபஸ்துகளை  கண்டும் காணாதபோது இச்சம்பவம் அரங்கேறியது. முதல்வரை சந்திக்க அமித்ஷா  மலபார் ஹில்லுக்கு ஷா வரவிருந்த பாதையில் நிறுத்தப்பட்டிருந்த காவல்துறையினரை பாட்டீல் கண்காணித்து கொண்டே வந்தார்.அந்த சமயத்தில் பிற்பகல்  12.15 மணிக்கு  ஷா ஃபட்னாவிஸின் வீட்டில் வெள்ளை சட்டை மற்றும் நீல நிற பிளேஸர் அணிந்த ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

அவர் உள்துறை அமைச்சகத்தின் அடையாள அட்டையுடன் காணப்பட்டார். தொடர்ந்து அவர்  தடைசெய்யப்பட்ட பகுதிகளில் சுற்றித் திரிந்தார்.  சில மணிநேரங்களில் அவரை அடையாளம் கண்டு விசாரித்ததில் தன்னை ஹேமந்த்பவார் என அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர் மத்திய அரசு நிறுவனத்தை சேர்ந்தவர் என கூறிக்கொண்டார். 
இருப்பினும், ஷா டெல்லிக்குப் புறப்பட்ட பிறகு, சிஆர்பிஎஃப் மண்டல டிஜிபியிடம்  ஹேமந்த் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஷிண்டே மற்றும் ஃபட்னாவிஸின் வீட்டிற்கு வெளியே தான் அவரைப் பார்த்ததாகக் கூறிய பிறகு பாட்டீலுக்கு பவாரின் படத்தை  டிஜிபி அனுப்பினார். 

போலீஸ்
இந்த தகவல்கள் மற்றும் சந்தேகத்தின் அடிப்படையில் ஹேமந்த் பவார் கைது செய்யப்பட்டார். ஹேமந்த் பவார் ஐபிசி படி பொது ஊழியரைப் போல் நடித்தல்  மற்றும் மோசடி நோக்கத்துடன் அரசு ஊழியர் பயன்படுத்திய டோக்கனைப் பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web