அதிர்ச்சி!! கட்டிடத் தொழிலாளி அடித்து கொலை!! தொடரும் கொடூரங்கள்!!

 
போதை குடி சாராயம் குற்றம் க்ரைம்


வட மாநில தொழிலாளர்கள் 2 பேருக்குள் ஏற்பட்ட கைகலப்பு கொலையில் முடிந்த சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சென்னையில் கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு வேலைகளில் வடமாநிலத் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் குழுக்களாக சென்னையின் பல்வேறு இடங்களில் தங்கி வேலை செய்து வருகின்றனர். 

கொலை
சென்னை அடுத்த நாகலூர் பகுதியில் கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சங்கர் தாஸ் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ரத்தீஸ் ஷேக் உள்ளிட்ட சில வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.சங்கர்தாசும், ரத்தீஸ் ஷேக்கும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது திடீரென்று இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதுல் ஆத்திரமடைந்த ரத்தீஸ் ஷேக், சங்கர் தாசை அடித்து கீழே தள்ளினார். இதில் சங்கர் தாசுக்கு தலையின் பின்புறம் காயத்துடன் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் பின்னர் ஒருவழியாக 2 பேரும் அவர்கள் தங்கியுள்ள இடத்திற்கு சென்று உறங்கினார்கள்.

போலீஸ்
அடுத்த நாள் காலை சங்கர்தாஸ் வேலைக்கு வராததால், சக தொழிலாளர்கள் அவரை எழுப்பியுள்ளனர். ஆனால் அவரிடம் எந்த அசைவும் இல்லாததால் அதிர்ச்சியடைந்து உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சங்கர்தாசை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று கூறியுள்ளனர்.இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சங்கர்தாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சங்கர்தாசை தாக்கி கொலை செய்த ரத்தீஸ் ஷேக் தேடி வருகின்றனர். தலைமறைவான ரத்தீஷ் ஷேக்கை விரைவில் பிடிப்பதற்கான தேடுதல் பணிகளை போலீசார் முடுக்கிவிட்டுள்ளனர். வாய்த்தகராறு வடமாநில தொழிலாளர் கொலையில் முடிந்த சம்பவத்தால் அப்பகுதியில் சக தொழிலாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web