அதிர்ச்சி!! டாக்டர் மோதி லாரி ஓட்டுனர் பலி!!

 
லாரி ஓட்டுனர் பலி

செஞ்சியில் இருசக்கர வாகனத்தின் மீது டிராக்டர் மோதிய விபத்தில் லாரி ஓட்டுநர் பலியான  சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அரசு ஒழுங்கு முறை விற்பனை கூடம் அருகே சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி இருசக்கர வாகனத்தில் மணிகண்டன் என்பவர் சென்றுகொண்டிருந்துள்ளார். லாரி ஓட்டுனரான இவர் திருவண்ணாமலை மாவட்டம் காட்டுவேலந்தல் பகுதியை சேர்ந்தவர். இவரது எதிர் திசையில் திருவண்ணாமலையிலிருந்து  சென்னை நோக்கி  சென்ற டிராக்டர் மோதி விபத்துக்குள்ளானது.

 விபத்தில் டாக்டரின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி மணிகண்டனுக்கு  தலையில் பலத்து காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரை மீட்ட பொதுமக்கள் செஞ்சி அரசு பொது மருத்துவமனைக்கு  சிகிச்சைக்காக கொண்டு சென்ற போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்ட செஞ்சி போலீசார்,  அப்பகுதியில் கடை ஒன்றில் பதிவாகியிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது இந்த விபத்தின் காட்சிகள் அதில் பதிவாகி இருந்த நிலையில் அந்த காட்சிகள் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From around the web