அதிர்ச்சி!! ப்ளஸ் 2 மாணவி எரித்து படுகொலை!! தொடரும் கொடூரங்கள்!!

 
பெட்ரோல்

பிளஸ் 2 மாணவியை ஒரு தலையாக காதலித்த வாலிபர், அவரை தீ வைத்து எரித்து துடிக்க துடிக்க படுகொலை செய்த சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.பெண் குழந்தைகள் மீதான வன்முறை குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாலியல் குற்றங்கள் மற்றொன்று ஒருதலை காதல் காரணமாக நடத்தப்படும் படுகொலைகள் என பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவது வேதனை அளிக்கிறது.

எரித்து கொலை
ஜார்க்கண்டின் தும்கா மாவட்டத்தில் அங்கிதா குமாரி என்ற சிறுமி பிளஸ் 2 படித்து வந்தார். இவரை வாலிபர் ஒருவர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இதை ஏற்க மறுத்த மாணவி அங்கிதாகுமாரி, அந்த வாலிபரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், அங்கிதா மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொடூரமாக எரித்துள்ளார். இதில் அதிகபட்ச தீக்காயமடைந்த மாணவியை மீட்ட அக்கம் பக்கத்தினர் அவரை  முதலில் புலோ ஜனோ மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சேர்த்தனர். அதன் பின்னர் மேல்சிகிச்சைக்காக மாணவி அங்கிதா ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதற்கிடையில் நேற்று மாணவி அங்கிதா குமாரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.மாணவி உயிரிழந்த தகவலை கேட்ட  உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் தும்கா நகரில் திடீர்சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த தும்கா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆம்பர் லக்டா சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.


மாணவியை எரித்து கொலை செய்த ஷாருக் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்த வழக்கு விரைவு நீதிமன்றத்தில் வழக்குபதிவு செய்யப்படும். எனவே அமைதி காத்து எங்களை பணி செய்ய விடுங்கள் என்று போலீசார் கிராம மக்களிடம் கோரிக்கை விடுத்தனர். இதை கேட்ட அவர்கள் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.

உடல்

மாணவி விவகாரம் குறித்து ஜார்கண்ட் சுகாதார மந்திரி பன்னா குப்தா கூறும்போது, ‘‘ஏற்கனவே சம்பவ இடத்தில் ஏற்கனவே 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்கு எதிராக விரைவான மற்றும் விரிவான விசாரணை நடைபெறும். மேலும் கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படும்’’ என்று உறுதியளித்தார்.ஒருதலை காதலால் பிளஸ்2 மாணவி உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web