அதிர்ச்சி!! மாணவிகளின் நடையை ஆபாசமாக வர்ணித்து பாடம் நடத்திய வக்கிர ஆசிரியர்!!

காதலிக்க  வேண்டிய வயதில்  காதலிக்க  வேண்டும்  என கூறி  ஆசிரியர்  ஒருவர்  மாணவிகளுக்கு  லவ்  லெட்டர்  கொடுங்கடா  என   வகுப்பறையில்  பேசிய சம்பவம்  சர்ச்சையை  ஏற்படுத்தியுள்ளது.

 
வக்கிர ஆசிரியர்

தெய்வத்திற்கு மேலாக ஆசிரியர்களை போற்றுவது நமது மரபு. ஆனால் தற்போது சில ஆசிரியர்களால் மாணவர்கள் பாலியல் சீண்டலுக்கு ஆளவதும், சிலர் அதனையும் தாண்டி கொடூரமாக பாலியல் வல்லுறவில் ஈடுபடுவதும் தற்போது நிகழ்ந்து வருகின்றது. இந்நிலையில் தற்போது ஆசிரியர் ஒருவர் மாணவர்களை காதலிக்க வேண்டிய வயதில் காதலிக்க வேண்டும் என வகுப்பறையில் மாணவர்களிடம் கூறியதோடு, காதல் ஒன்றும் குற்றமல்ல என்றும் மாணவிகளுக்கு காதல் கடிதம் கொடுங்க என தூண்டுவது வைரலாகி வருகின்றது.  

 

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அதில் பத்தாம் வகுப்பு ஆசிரியராக ஒருவர் பணியாற்றி வருகிறார். அடுத்த மாதம் அவர் ஓய்வுபெற உள்ள நிலையில் தன்னிடம் படிக்கும் மாணவர்கள் காதலிக்க வேண்டும் என அவர் கூறி வந்துள்ளார். அந்தந்த வயதில் அதையதை செய்துவிட வேண்டும், இது காதலிக்க வேண்டிய வயது. இந்த வயதில் காதலிக்காமல் எப்போது காதலிக்க போகிறீர்கள்? எனவே மாணவிகளுக்கு மாணவர்கள் லவ் லெட்டர் கொடுங்கள் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி மாணவிகளின் நடையை ஆபாசமாக வர்ணித்து மாணவர்கள் மத்தியில் உணர்ச்சியை தூண்டும் வகையில் பேசி வந்துள்ளார். ஆசிரியரின் இந்த இழிசெயலை பொறுக்கமுடியாமல் ஒரு மாணவன் பெற்றோர்களிடம் புகார் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பள்ளியின் தலைமையாசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழகம் தலைவர்களிடம் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்இதில் ஆசிரியரின் வக்கிர செயல் உறுதியானதால் கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் போலீசாரிடம் பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்  தான் ஓய்வு பெறும் நேரத்தில் தன் மீது புகார் அளித்தால் நிச்சயம் உங்கள் பெயர்களை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்வேன் என ஆசிரியர் மிரட்டி வருவாதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுள்ளது..

From around the web