அதிர்ச்சி! பல்லி விழுந்த தண்ணீரைக் குடித்த 10 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

 
பல்லி விழுந்த தண்ணீர் சிறுவர்கள் மருத்துவமனை

ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டியில் இருந்து தண்ணீர் குடித்த 10 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ஆரணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே பூசிமலைக்குப்பம் ஊராட்சியில் முனீஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அருகே உள்ள விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் அருந்ததிபாளையம் கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தனர். சோர்வடைந்த சிறுவர்கள், அதே பகுதியில் ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள சின்டெக்ஸ் தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்தனர். 

பல்லி விழுந்த தண்ணீர் சிறுவர்கள் மருத்துவமனை

அப்போது, குடிநீர் குழாய் வழியாக இறந்த பல்லி ஒன்று வந்ததுள்ளது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த சிறுவர்கள் உடனடியாக வீட்டிற்கு சென்று, பல்லி இறந்த தண்ணீர் குடித்த தகவலை பெற்றோர்களிடம் தெரிவித்தனர். சிறிது நேரத்தில், பல்லி விழுந்த தண்ணீரை குடித்த ஆஷிகா (14), தர்ஷன் (10), சுபாஷினி (13), பூவரசன் (9), கோபிகா (12), தர்ஷன் (8), கோபாலகிருஷ்ணன் (13), ரத்தீஷ் (7), காயத்ரி (11), கனிஷ்கா (5) ஆகிய 10 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டதுள்ளது.

இதைக் கண்டு, அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் உடனடியாக தங்களது பிள்ளைகளை முள்ளண்டிரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு, அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆரணி

இதற்கிடையே, தகவல் அறிந்த ஆரணி ஆர்டிஓ தனலட்சுமி, தாசில்தார் ஜெகதீசன் மற்றும் அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று சிறுவர்களுக்கு ஆறுதல் கூறினர். பின்னர், மருத்துவர்களிடம் சிறுவர்களின் உடல் நலம் குறித்து கேட்டறிந்து, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு பழம் மற்றும் பிஸ்கட் வழங்கினர்.

பல்லி விழுந்த தண்ணீரை குடித்த சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web