அதிர்ச்சி! இன்னொரு ஊரடங்கு! ஓமிக்ரான் மாறுபாடு புதிய அலையை ஏற்படுத்தலாம்!

 
இந்தியாவில் தீவிரமடையும் ஒமிக்ரான்! 19 மாநிலங்களில் 578 பேர் பாதிப்பு!

மறுபடியும் ஆரம்பத்திலே இருந்தா என்று யோசிக்காதீங்க. உலக நாடுகளின் நிலைமை அப்படி தான் போய்கிட்டு இருக்கு. ஒமிக்ரானின்  மாறுபாடுகள் இன்னொரு ஊரடங்கு வர வழிவகுக்கலாம் என்று  உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது. சீனாவில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவத்தொடங்கி, உலகில் இன்றளவும் ஆதிக்கம் செலுத்தி வந்தாலும், இந்த தொற்றினால் ஏற்படுகிற உயிர்ப்பலி எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. இருந்தபோதிலும், இந்த தொற்று நோய் இன்னும் சர்வதேச பொது சுகாதார அவசரநிலையாகவே நீடிக்கிறது என்று உலக சுகாதார நிறுவனம் கூறி உள்ளது. இது அதன் மிக உயர்ந்த எச்சரிக்கை நிலை ஆகும்.

இந்த நிலையில், சமீப காலமாக சிங்கப்பூரில் ‘எக்ஸ்பிபி’ வகை ஓமிக்ரான் பரவி வருவதாக தகவல்கள் வந்துள்ளது. இந்நிலையில் மரபணு மாறிய ஒமிக்ரான் வைரசால் மேலும் ஒரு கொரோனா அலை வீசக்கூடும் என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார். புனேவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒமிக்ரானின் அதிவேக பரவல் குறித்து பேசினார்.

அதிர்ச்சி!! அமெரிக்காவில் முதல் ஒமிக்ரான் மரணம்! மக்கள் பீதி!

அவர் கூறியதாவது, ஓமிக்ரானின் 300 க்கும் மேற்பட்ட துணை வகைகள் உள்ளன. இப்போது தொடர்புடையது எக்ஸ்பிபி என்று நான் நினைக்கிறேன், இது ஒரு மறுசீரமைப்பு வைரஸ் ஆகும். சில மறுசீரமைப்பு வைரஸ்களை நாம் முன்பே பார்த்துள்ளோம். இது மிகவும் நோயெதிர்ப்பை தவிர்க்கிறது, அதாவது இது ஆன்டிபாடிகளை கடக்க முடியும். எக்ஸ்பிபி காரணமாக சில நாடுகளில் தொற்றுநோய்களின் மற்றொரு அலையை நாம் காணலாம். 

இதன் வீரியம் பற்றி இன்னும் முழுமையாக தெரியவில்லை. வைரஸ் உருவாகும்போது, ​​அது மேலும் பரவக்கூடியதாக மாறும். சர்வதே அளவில் கொரோனா பொது சுகாதார அவசரநிலை தொடர்ந்து உள்ளது. மேலும் வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் ஒவ்வொரு வாரமும் 8,000 முதல் 9,000 இறப்புகள் பதிவாகின்றன. 

பிரிட்டன், ஜெர்மனியில் ஒமிக்ரான் தொற்று: பீதியில் மக்கள்!

எனவே தொற்றுநோய் முடிந்துவிட்டது என்று நாங்கள் கூறவில்லை, அதாவது அனைத்து முன்னெச்சரிக்கைகள் மற்றும் கருவிகள் தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றன. நல்ல விஷயம் என்னவென்றால், நம்மிடம் இப்போது பல கருவிகள் உள்ளன, மிக முக்கியமான விஷயம் தடுப்பூசிகள் என கூறினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web