அதிர்ச்சி! பாஜக. பேரணியில் வன்முறை! காவல் உதவி ஆணையரை கொடூரமாக தாக்கும் வன்முறையாளர்கள்! வைரலாகும் வீடியோ!
காவல் உதவி ஆணையரை, பா.ஜ.க. பேரணியில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் கடுமையாக தாக்கும் வீடியோ தற்போது வைரலாகி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், புதிய தலைமை செயலகத்தை நோக்கி பா.ஜ.க.வினர் பேரணியாக செல்வதாக அறிவிப்பு வெளியிடப் பட்டிருந்தது. இந்நிலையில், போலீசாரின் அனுமதியின்றி இந்த பேரணி நடத்தப்பட்டதால் அதனை தடுக்கும் வகையில் ‘நார்த் 24 பர்கானாஸ், ஹவுரா உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார் தயார் நிலையில் தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
An assistant commissioner of #KolkataPolice grievously injured in today’s protest rally in the city. pic.twitter.com/1erZNeeJAY
— Sreyashi Dey (@SreyashiDey) September 13, 2022
இருப்பினும் பேரணியில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் போலீசார் அமைத்திருந்த தடுப்புகளை மீறி உள்ளே நுழைய பார்த்தனர். எனவே போலீசாருக்கும் பா.ஜ.க.வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்து போராட்டக்காரர்களை அங்கிருந்து கலைத்தனர். இந்த வன்முறை சம்பவத்தின் போது போலீஸ் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
போலீசாருக்கும், பா.ஜ.க.வினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் உதவி ஆணையர் ஒருவர் வன்முறையாளர்களால் கடுமையாக தாக்கப்பட்டார். காவல் உதவி ஆணையர் தாக்கப்படும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அனுமதியின்றி நடத்தப்பட்ட பேரணியை தடுக்க வந்த போலீசுக்கு நேர்ந்த கதி குறித்து பொது மக்கள் அதிருப்தி தெரிவித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
காவல் உதவி ஆணையரை துரத்தி செல்லும் வன்முறையாளர்கள் அவரை பலமாக தாக்கும் வீடியோ வைரலாகி கடும் கண்டனத்தை பெற்று வருகிறது. இதனால் அப்பகுதி போர்க்களம் போல காட்சி அளிக்கிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!