அதிர்ச்சி! குஜராத்தில் பாலம் இடிந்து 90 பேர் பலி! 500 பேர் ஆற்றில் விழுந்த சோகம்!

 
குஜராத் பாலம்

ஒவ்வொரு முறையும், ஓர் அசம்பாவிதம் நேரும் போது மட்டுமே அரசியல்வாதிகளைக் குறைச் சொல்லும் நாம் தான், தேர்தல் நேரத்தில் முடிவெடுக்க தடுமாறுகிறோம்.

நூற்றாண்டு கண்ட குஜராத்தின் மோர்பி பகுதியில் ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த பாலம், பராமரிப்பு பணிகள் முடிந்து கடந்த 5 நாட்களுக்கு முன்பாக தான் மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது. பராமரிப்பு பணிகளை சரியாக செய்யவில்லையா என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பாலத்தைத் திறந்து வைத்த 5 நாட்களிலேயே மிகப் பெரிய விபத்து நேர்ந்துள்ளது. நேற்று ஆற்றின் மீது கட்டப்பட்ட கேபிள் பாலம்,  மக்களின் எடையைத் தாங்காமல் அப்படியே அந்தரத்தில் சரிந்து விழுந்து பெரும் விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில் 500 பேர் ஆற்றில் மூழ்கியதாக முதலில் தகவல்  தெரிவிக்கப்பட்டிருந்தது.

குஜராத் பாலம்

உடனடியாக ஆற்றில் மூழ்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரபடுத்தப்பட்டன. இதற்கிடையே ஆற்று நீரில் மூழ்கி பலியானவர்கள் எண்ணிக்கை 60யைத் தாண்டிய நிலையில், தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை 90யைத் தொட்டுள்ளன. பலரும் காயமடைந்துள்ளனர். மீட்பு பணிகளை துரிதப்படுத்த குஜராத் அரசுக்கு பிரதமர் மோடி  உத்தரவிட்டுள்ள நிலையில், இன்று நடைபெறுவதாக இருந்த பாஜக நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web