அதிர்ச்சி! வீட்டிற்கு அழைத்து கற்பழித்தார்! பிரபல பாடகர் மீது ஆடை வடிவமைப்பாளர் காவல் நிலையத்தில் புகார்!

 
ராகுல் ஜெயின்

பிரபல இந்தி திரைப்பட இசையமைப்பாளர், பாடகரான ராகுல் ஜெயின் மீது ஆடை வடிவமைப்பாளர் ஓசிவரா பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை கூறியுள்ள சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

மும்பையில் வசித்து வரும் இளம் பெண் ஆடை வடிவமைப்பாளர் ஓசிவரா காவல் நிலையத்திற்கு சென்று பகீர் புகார் ஒன்றை அளித்தார். அதில், பிரபல பாடகரும் இசையமைப்பாளருமான ராகுல் ஜெயின் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என்று கூறியுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட ஆடை வடிவமைப்பாளர் ஓசிவரா கூறும் போது, ‘‘இன்ஸ்டாகிராமில் பாடகர் ராகுல் ஜெயினின் அறிமுகம் கிடைத்துள்ளது. அப்போது தனது ஆடை வடிவமைப்பு பணிகளை  வெகுவாக பாராட்டி பேசினார். மேலும் தனது தனிப்பட்ட ஆடை வடிவமைப்பாளராக நியமிக்க இருப்பதாகவும் அவர் உறுதி அளித்தார்.

இதன் பிறகு ராகுல் ஜெயின், தான் வசிக்கும் மும்பை அந்தேரி பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு வந்து தன்னை சந்திக்குமாறு கேட்டுக் கொண்டார். இதை நம்பி கடந்த 11ம் தேதி இளம் பெண், ராகுல் ஜெயின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டை சுற்றிக் காட்டுகிறேன் என்று கூறி தன்னை படுக்கை அறைக்கு சென்றதாகவும், மேலும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த தான் எதிர்ப்பு தெரிவித்த போது, கடுமையாக தாக்கினார். இந்த சம்பவங்கள் குறித்த ஆதாரங்கள் அனைத்தையும் ராகுல் ஜெயின் அழிக்க முயற்சி செய்திருக்கிறார். எனவே அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றும் தனது புகாரில் தெரிவித்திருந்தார்.

ராகுல் ஜெயின்

இது குறித்து போலீசார், பாடகர்  ராகுல் ஜெயின் மீது, பாலியல் பலாத்காரம், தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனாலும் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை.  இந்நிலையில் பாடகர் ராகுல் ஜெயின் தன் மீது சுமத்தப்பட்டுள்ளது பொய் வழக்கு என்றும், அந்த பெண் யார் என்பதே எனக்கு தெரியாது என்றும் கூறியுள்ளார். அவர் கூறியபடி எந்த சம்பவமும் நடக்கவில்லை இது ஆதாரமற்றது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஏற்கனவே இதுபோன்ற ஒரு குற்றச்சாட்டை ஒரு பெண் என் மீது சுமத்திய போது, அந்த வழக்கில் எனக்கு நீதி கிடைத்தது. மீண்டும் அதே போன்றதொரு சிக்கலில் நான் மாட்டி இருக்கிறேன். ஒருவேளை அந்த பெண்ணும், இந்த பெண்ணும் கூட்டாளிகளாக இருப்பார்களோ என்ற சந்தேகம் எனக்கு எழுந்துள்ளது என்று தெரிவித்திருக்கிறார். பிரபல பாடகர் மற்றும் இசையமைப்பாளராக இருக்கும் ராகுல்ஜெயின் மீது பெண் ஆடை வடிவமைப்பாளர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web