அதிர்ச்சி! கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை!

 
சுபிதா

கன்னியாகுமரி மாவட்டத்தில் தனியார் செவிலியர் கல்லூரியில் படித்து வந்த மாணவி சுபிதா கிரேஸ் என்பவர், கல்லூரி கட்டணம் செலுத்த முடியாததால் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி அருகேயுள்ள அந்தரபுரம் என்கிற பகுதியைச் சேர்ந்தவர் தேவதாஸ். இவரது மகள் சுபிதா(21).  சுபிதா, அந்த பகுதியில் உள்ள தனியார் செவிலியர் கல்லூரி ஒன்றில் இறுதி ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், கல்லூரியில், செய்முறை தேர்வுக்கு மாணவி சுபிதா கட்டணம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது.  ஆசிரியர்கள் வகுப்பறையில் வைத்து மாணவி சுபிதாவிடம் செய்முறை தேர்வுக்கான கட்டணத்தை கேட்டு வந்ததால், கடந்த சில நாட்களாக மாணவி சுபிதா, கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். 

சுபிதா

விரைவில் கல்லூரி கட்டணத்தைச் செலுத்தி விடுவதாகவும், கல்லூரிக்குச் செல்லும் படியும் சுபிதாவிடம் பெற்றோர்கள்  அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில், கல்லூரி மாணவி சுபிதா கிரேஸ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். 

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

மயங்கிய நிலையில் கிடந்த மாணவி சுபிதாவை, அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், நிலைமை மோசமானதையடுத்து மேல் சிகிச்சைக்காக குமரி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் நேற்று மாலை சிகிச்சைப் பலனின்றி சுபிதா கிரேஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.

மாணவியின் மரணம் குறித்து தகவல் அறிந்த போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மாணவியின் மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web