அதிர்ச்சி! குழந்தைகள் கண் முன்னே தந்தை நீரில் மூழ்கி பலி!

 
கடல் நீர் மூழ்கி தண்ணீர்

குழந்தைகளுடன் கிணற்றில் குளிக்க சென்ற தந்தை நீரில் மூழ்கி, குழந்தையின் கண் முன்னேயே பலியான சம்பவம் திருப்பத்தூர் மக்களை சோகத்தை ஆழ்த்தியுள்ளது. 

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே உள்ள கும்மிடிக்கான் பட்டி ஊராட்சிக்குட்பட்ட சென்னன் பகுதியில் தனிநபருக்கு சொந்தமான கிணற்றில் அதே பகுதியில் வசித்து வந்த  சீனிவாசன் தன்னுடைய மகன் கோல் கிருஷ்ணன் மற்றும் மகளு கபிலா ஸ்ரீ ஆகியோருடன் குளிக்க சென்றுள்ளார்.

இந்த நிலையில், சுமார் ஒரு மணி நேரமாக கிணற்றில் பிள்ளைகள் மற்றும் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த சீனிவாசன் திடீரென உள்ளிருந்து ஒரு முறை வெளியே வந்து மீண்டும் மூழ்கி உள்ளே சென்றுள்ளார். இதனைக் கண்ட நண்பர்களும் பிள்ளைகளும் சீனிவாசன் மூச்சுப்பிடித்து விளையாடுவதாக எண்ணி அமைதியாக குளித்துக் கொண்டிருந்தனர். 

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

நீண்ட நேரமாகியும் சீனிவாசன் வெளியே வராததால் பதற்றமடைந்த நண்பர்கள் மற்றும் சீனிவாசன் பிள்ளைகள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கூறியுள்ளனர். இது குறித்து கந்திலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கந்திலி போலீசார் திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததின் அடிப்படையில் தீயணைப்பு நிலைய அலுவலர் அசோகன் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு காவலர்கள் நீண்ட நேரம் போராடி சீனிவாசனின் உடலை மீட்டனர்.

கடல் நீர் மூழ்கி தண்ணீர் மரணம்

தொடர்ந்து கந்திலி போலீசார் சீனிவாசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த  சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிள்ளைகளுடன் கிணற்றில் குளிக்கச் சென்ற தந்தை கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web