அதிர்ச்சி! மனைவியை கூட்டு பலாத்காரம் செய்து முத்தலாக் கொடுத்த கணவன்!

 
மாணவி பலாத்காரம்!! ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்!! தமிழக ராணுவ வீரரின் வெறிச்செயல்!!

தனது சொந்த மனைவியையே, உறவினர்களுடன் சேர்ந்து கொண்டு, கூட்டாக பலாத்காரம் செய்து விட்டு, அதே இடத்தில் முத்தலாக் கூறி விவாகரத்தும் செய்த  கொடூர கணவன், வரதட்சணை தராததால் இந்த படுபாதக செயலில் ஈடுபட்டதாக தெரிய வருகிறது. இந்த சம்பவம் சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை இந்தியாவில் நாளுக்கு நாள் எல்லை மீறி அதிகரித்துள்ளது வேதனையளிக்கிறது. அதையும் தாண்டி கூட்டு பாலியல் வன்கொடுமைகளும் விஸ்வரூபம் எடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் வசித்து வருபவர் முகமது அட்னான். திருமணமான இவர், தனது மனைவியிடம் தொடர்ந்து வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளார். இதனால் விரக்தியடைந்த அவரது மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

கற்பழிப்பு பலாத்காரம் செக்ஸ் பாலியல் பெண்

கடந்த செவ்வாய்க்கிழமை மனைவியின் தாய் வீட்டிற்கு சென்ற முகமது அட்னான் தன்னுடன் உறவினர் ஒருவரை அழைத்து சென்றுள்ளார். வீட்டில் தனியாக இருந்த மனைவியிடம் வரதட்சணை கேட்டு மிரட்டிவிட்டு கடுமையாக தாக்கி இருக்கிறார். ஒரு கட்டத்தில் உறவினருடன் சேர்ந்து மனைவியை கூட்டு பலாத்காரம் செய்துவிட்டு, அதே இடத்தில் முத்தலாத் முறையில் விவாகரத்தும் கொடுத்துள்ளார். இதனால் அந்த அப்பாவி பெண் நிலைகுலைந்து போயுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்த பெண்ணின் பெற்றோரிடம் நடந்த அனைத்தையும் கூறி அழுதுள்ளார்.

குடும்ப வன்முறை பெண்கள் பாலியல் பலாத்காரம்
பின்னர் பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து முகமது அட்னானை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தலைமறைவான மற்றொரு குற்றவாளியான உறவினரையும் போலீசார் தேடி வருகின்றனர். கடந்த 2017ம் ஆண்டு இந்தியாவில் முத்தலாக் முறை சட்டவிரோதமானத என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது. அதைத்தொடர்ந்து 2019ம் ஆண்டு இந்தியாவில் முத்தலாக் முறை தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மனைவியை வரதட்சணை கொடுமை செய்து கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட கணவன் அதே இடத்தில் வைத்து முத்தலாக் முறையில் விவாகரத்து கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web