அதிர்ச்சி! பி.டி.உஷாவின் பயிற்சி பள்ளியில், தமிழகத்தின் தடகள பயிற்சியாளர் தற்கொலை!

 
ஜெயந்தி

தமிழகத்தைச் சேர்ந்த தடகள பயிற்சியாளர் ஜெயந்தி, கேரளா மாநிலத்தில், பி.டி.உஷாவின் பயிற்சி பள்ளியில், வேலைப் பார்த்து வந்த நிலையில், தற்கொலைச் செய்து கொண்டது அதிர செய்துள்ளது.

ஒரு தலைமுறையைச் சேர்ந்த பெண்களின் கனவு நாயகியாக வலம் வந்தவர் பி.டி.உஷா. இப்போது அப்துல்கலாம், கல்பனா சாவ்லா என்று உதாரணத்தைக் கை காட்டுகிற நாம் தான், முன்பொரு தலைமுறையைச் சேர்ந்த  பெண்களை விளையாட்டுப் போட்டிகளில் பக்கமே அனுப்ப அனுமதிக்காமல் இருந்தார்கள். ஓட்டப்பந்தயத்தில் சர்வதேச அளவில் தங்கம், வெள்ளி உள்பட ஏராளமான பதக்கங்களை பி.டி.உஷா, இந்தியாவுக்காக குவித்து, இந்தியாவின் தங்க மங்கை என்று அழைக்கப்படுவதைப் பார்த்த அடுத்த தலைமுறையினர், கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் வீட்டு பெண்களை அனுமதிக்க துவங்கினார்கள்.

பி.டி.உஷா

தடகள போட்டியில் பல சாதனைகளைப் படைத்துள்ள பி.டி.உஷா, தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.  பி.டி.உஷா கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு பாலுசேரி கினாலூரில் தடகள பயிற்சி பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். இந்த பயிற்சி பள்ளியில் இணை பயிற்சியாளராக தமிழ்நாட்டின் கோவை மாவட்டம் குளத்து பாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவரது மகள் ஜெயந்தி (27) பணியாற்றி வந்தார். அவர் அங்குள்ள விடுதியில் தங்கி இருந்து பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் ஜெயந்தி, நேற்று பயிற்சிக்கு வரவில்லை. இதனால் அதிகாலை 5 மணியளவில் மற்ற பயிற்சியாளர்கள் ஜெயந்தி தங்கி இருந்த விடுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது அவர் படுக்கை அறையில் இருந்த மின் விசிறியில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தற்கொலை

இது குறித்து பள்ளி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக பாலுசேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக பாலுசேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து, பெண் பயிற்சியாளர் ஜெயந்தி தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பள்ளி பயிற்சியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web