அதிர்ச்சி! தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினரின் துப்பாக்கி சூடு!

 
துப்பாக்கி சூடு

மன்னார் வளைகுடா பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறையை சேர்ந்த 10 மீனவர்கள் விசைப்படகில் ராமநாதபுரம், தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ஒன்றாக சேர்ந்து மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது இந்திய கடற்படை வீரர்கள் அங்கு வந்து மீனவர்களின் படகை நிறுத்தும் படி எச்சரித்தனர். ஆனால் மீனவர்கள் ராணுவத்தினரின் பேச்சைக் கேட்காமல் படகை நிறுத்தாமல் சென்றதாக கூறப்படுகிறது.

ராணுவம்

இதனால் சந்தேகத்தின் பேரிலும், பாதுகாப்பு கருதியும் இந்திய கடற்படை வீரர்கள் மீனவர்கள் இருந்த விசைப் படகு மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இந்த துப்பாக்கி சூட்டில் வீரவேல் என்ற மீனவரின் வயிறு, தொடை பகுதிகளில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது.

அதன் பின்னர் இந்திய கடற்படையினர் நடத்திய விசாரணையில் விசைப்படகில் இருந்தவர்கள் மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் என்பது தெரிய வந்தது. அதன் பின்னர் காயமடைந்த மீனவர் வீரவேலை மீட்டு வீமான படை வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். 

மயிலாடுதுறை

அதன் பின்னர் காயமடைந்த மீனவர் வீரவேல் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்¬க்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது  அவருக்கு டாக்கடர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்திய கடற்படை வீரர்கள் தமிழக மீனவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web