அதிர்ச்சி! LKG சிறுமிக்கு பாலியல் தொல்லை! பள்ளி டிரைவருக்கு தர்ம அடி!

 
பாலியல் தொல்லை

பள்ளியில் படிக்கும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த கார் ஓட்டுநருக்கு பெற்றோர் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தனியார் நர்சரி பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி முதல்வரின் கார் ஓட்டுநராக ரஜினிகுமார் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

ஓட்டுநர் ரஜினி குமார், பள்ளியில் படிக்கும் சிறுமிகளுக்கு தொடர்ந்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில் அதே பள்ளியில், பள்ளியின் தலைவர் அறைக்கு எதிரே அமைந்துள்ள ஆய்வகத்தில் 4 வயது எல்கேஜி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 

குடும்ப வன்முறை பெண்கள் பாலியல் பலாத்காரம்

சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதையும், கடந்த இரண்டு மாதங்களாக அவள் மனமுடைந்து அடிக்கடி அழுது கொண்டிருப்பதையும் கவனித்த பிறகு தான் இந்த விஷயம் வெளிச்சத்துக்கு தெரிய வந்தது. சிறுமி தனது தாயிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். மறுநாள் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, சிறுமி குற்றம் செய்தவரை சுட்டிக்காட்டினார். 

அதைத் தொடர்ந்து பெற்றோர், பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இன்று காலை பள்ளிக்கு வந்த சிறுமியின் பெற்றோர் ஓட்டுநர் ரஜினிகுமாரை சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்.

பாலியல் தொல்லை

கைது செய்யப்பட்ட ரஜினிகுமார் மீது ஐபிசி பிரிவு 376 (கற்பழிப்பு) மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.  இது குறித்து மற்ற பெற்றோர்களும் ரஜினி குறித்து முதல்வரிடம் புகார் அளித்துள்ளதாகவும், இந்த விவகாரத்தில் ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா என தற்போது விசாரணை நடத்தபட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web