அதிர்ச்சி! தனியார் பள்ளி ப்ளஸ் 1 மாணவி தற்கொலை! தமிழகத்தில் தொடரும் சோகம்!

 
தற்கொலை

பெண் காவலரின் ப்ளஸ் 1 படிக்கும் மகள் திடீரென்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை கீழ்பாக்கம் காவலர் குடியிருப்பில் கலை வாணி என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் ராமதேவன். கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் கணவரை பிரிந்த கலைவாணி தனது 15 வயது மகள் அசக்ராவுடன் வாழ்த்து வருகிறார். இவர் புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வருகிறார். இவரது மகள் சென்னை முகப்பேரில் உள்ள ஒரு தனியார்ப் பள்ளியில் ப்ளஸ் 1 படித்து வந்தார்.

வீட்டில் இருவர் மட்டும் வசித்து வந்த நிலையில், நேற்று கலைவாணி வழக்கம் போல் காவல் நிலையத்திற்கு செல்ல வீட்டில இருந்து புறப்பட்டார். அந்த நேரத்தில் அவரது மகள் அக்சரா வீட்டில் தனியாக இருந்ததாக கூறப்படுகிறது.

தற்கொலை

இந்நிலையில் கலைவாணியின் சகோதரன் குணசேகரன் அவரது வீட்டிற்கு சென்று பார்த்த போது வீட்டின் கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. இதனால் வீட்டின் கதவை தட்டி இருக்கிறார். நீண்ட நேரமாகியும் அக்சரா கதவை திறக்காததால் அதிர்ச்சியடைந்து கலைவாணிக்கு தகவல் தெரிவித்தார்.

இதை கேட்டு அதிர்ந்துபோன கலைவாணி, உடனடியாக வீட்டிற்கு கிளம்பிச் சென்றார். அதைத்தொடர்ந்து கலைவாணியும், அவரது சகோதரரும் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அதிர்ச்சியடைந்தனர்.

மகள் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த கலைவாணி அழுது துடித்தார். உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து சென்ற போலீசார், மாணவியின் உடலை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அக்சராவை பரிசோதித்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

அதிர்ச்சி!! சினிமா பாணியில் ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை!!

இது குறித்து கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ப்ளஸ் 1 மாணவி அக்சரா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கீழ்ப்பாக்கம் காவலரின் ப்ளஸ் 1 படிக்கும் மகள் எடுத்த திடீர் முடிவால் அப்பகுதி மக்கள் சோகம் அடைந்துள்ளனர்.

From around the web