அதிர்ச்சி! பள்ளி மாணவன் தவறி விழுந்து பலி! பெருந்து சக்கரம் தலையில் ஏறி இறங்கிய கொடூரம்!

 
பிரபா

எத்தனை கனவுகளுடன் பெற்றோர்கள், தங்களது மகனைப் பள்ளிக்கு அனுப்பி இருப்பார்கள். வாரத்தில் முதல் நாள், உற்சாகமாக பள்ளிக்கு கிளம்பி சென்ற மகன், இப்போது உயிருடன் இல்லை. பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த 9ம் வகுப்பு பள்ளி மாணவன் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பரதாப சம்பவம் மதுரையில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம், ஆனையூரில் இருந்து அனுப்பானடி நோக்கி பேருந்து ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது. பேருந்தில் இன்று கூட்டம் அதிகளவில் இருந்ததாக கூறப்படுகிறது.

இன்று திங்கட்கிழமை என்பதால், அந்த பேருந்தில் பள்ளி செல்வதற்காக மாணவர்களும் பயணித்துள்ளனர். கூட்டம் அதிகமாக இருந்ததால், பிரபாகரன் என்ற 9-ம் வகுப்பு மாணவனும் பேருந்தி முன் படிக்கட்டில் தொங்கிய படி பயணம் செய்துள்ளார்.

ஆக்ரோஷமாக மோதி கொண்ட பள்ளி மாணவிகள்- பரபரப்பான பேருந்து நிலையம்..!
பேருந்து பெத்தானிபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது, வளைவில் திரும்ப முயற்சித்தது. அப்போது மாணவன் பிரபாகரன் நிலைதடுமாறி பேருந்தின் படுக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். அப்போது பேருந்தின் பின் சக்கரம் மாணவன் பிரபாகரனின் தலை மீது ஏறி இறங்கியது. 

இதில் படுகாயமடைந்த மாணவன் பிரபாகரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தான். இது குறித்து தகவல் அறிந்த போலீசார், மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

மாணவர்கள்

பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் பலர் பேருந்தின் படிக்கட்டில் தொங்கி பயணம் செய்வது அதிகரித்து வருகிறது. இதில் ஏற்படும் உயிர் ஆபத்து குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தாலும் எந்த பலனும் இல்லை என்பதை நிதர்சனமான உண்மை. இது குறித்து பெற்றோர்களும், காவல்துறையும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 9ம் வகுப்பு மாணவன் பேருந்தின் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web