அதிர்ச்சி! தமிழக கபடி வீரர் மும்பையில் கிரிக்கெட் ஸ்டெம்பால் அடித்து படுகொலை!
தமிழக கபடி வீரர் விமல்ராஜ், மும்பை தாராவியில் கிரிக்கெட் ஸ்டெம்பால் அடித்துக் கொலைச் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை தாராவி காமராஜ் சால் பகுதியில் வசித்து வந்தவர் விமல்ராஜ் (25). இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் கிராமம். விமல்ராஜ் கபடி விளையாட்டு வீரராக இருந்து வந்தார்.
இந்நிலையில் விமல்ராஜ் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் அவரது வீட்டின் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த தாராவி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் முக்கிய குற்றவாளி மல்லேஷ் (30) என்பவரை போலீசார் கைது செய்யப்பட்டான்.
Maharashtra | A 26-year-old kabaddi player was bludgeoned to death with a cricket stump on the intervening night of Friday & Saturday in Dharavi. 2 accused were arrested in case who confessed to the crime during interrogation. Case registered under IPC Section 302: Mumbai Police
— ANI (@ANI) July 24, 2022
மல்லேஷிடம் போலீஸ் நடத்திய விசாரணையில், ‘‘சில மாதங்களுக்கு முன்பு கொலையாளி மல்லேஷ் தனது நண்பர்களுடன் பொது இடத்தில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது இது குறித்து விமல்ராஜ் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மல்லேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து விமல்ராஜை நேற்று முன்தினம் அதிகாலை 3.30 மணியளவில் கிரிக்கெட் ஸ்டெம்பால் அடித்துவிட்டு தப்பியுள்ளனர்.
இதில் விமல்ராஜ் பலத்த காயமடைந்த நிலையில் அவரை மீட்ட நண்பர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும் விமல்ராஜ் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார் என்ற கூறியுள்ளான்.
மேலும் மல்லேசுடன் சேர்ந்து விமல்ராஜை கொலை செய்த மற்ற 2 குற்றவாளிகளையும் போலீசார் தீவிரமாக தேடி கைது செய்தனர். மேலும் ஒரு நபர் தலைமறைவாக இருப்பதால் போலீசார் தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த கபடி வீரர் மும்பை தாராவியில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?