அதிர்ச்சி! மயக்க மருந்து கொடுத்து கர்ப்பிணியை பலாத்காரம் செய்த மருத்துவர்!

 
பாலியல் தொழிலாளர்கள்

பிரசவத்திற்காக மருத்துவமனைக்குச் சென்ற கர்ப்பிணி பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து, மருத்துவரே பலாத்காரம்  செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. அப்பா, அண்ணன், தாத்தா, மாமா என உறவுகளில் துவங்கி பள்ளி சிறுவன், பக்கத்து வீட்டு நண்பர், பள்ளி ஆசிரியர், வேன் டிரைவர், கூடவே பழகிய தோழன் என வரைமுறைகளைக் கடந்து பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையை பிரயோகிப்பதில் ஆண்கள் தங்களது வக்ர புத்தியை செலுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், கடவுளுக்கு சமமாக கருதப்படும், மருத்துவத் துறையிலும் அயோக்கிய ஆண்கள் ஆதிக்கம் செலுத்தியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டில் மருத்துவர் ஒருவர், பிரசவத்திற்காக ரெகுலர் செக்கப்பிற்கு வந்த கர்ப்பிணி பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து, அந்தப் பெண்ணுடன் அவர் உடலுறவு மேற்கொண்டுள்ளார். இது அந்த அறையில் பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமராவில் பதிவாகி உள்ளது. மருத்துவர் அறையில் இருந்த கேமரா காட்சிகளின் அடிப்படையில் மருத்துவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

பாலியல் பலாத்காரம்

பிரேசில் நாட்டில் ரியோ டி ஜெனிரோ டா-முல்ஹர் என்ற மருத்துவமனையில் மயக்கவியல் நிபுணராக பணியாற்றி வருபவர் பெஜேரா. இவர் கடந்த சில மாதங்களாக அந்த மருத்துமனையில் பணியாற்றி வருகிறார், இந்நிலையில் மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக வந்த பெண்ணுக்கு மயக்கவியல் நிபுணரான பெஜேரா மயக்க மருந்து கொடுத்து அவருடன் உடலுறவில் ஈடுபட்டுள்ளார்.

இது அந்த அறையில் இருந்த ரகசிய கேமராவில் பதிவானது, இந்த காட்சிகளை பார்த்த மருத்துவமனை நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில் பெஜேரா வை ரியோடி ஜெனிரோ போலீசார் கைது செய்துள்ளனர். அதன் பின்னர், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதுவரை இப்படி மருத்துவமனைக்கு வந்த ஐந்து பெண்களுடன் அவர் இது போல அத்துமீறி உடலுறவில் ஈடுபட்டுள்ளதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். அவருக்கு 8 முதல் 15 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web