அதிர்ச்சி! பிறந்தநாளை கொண்டாட மறுத்த பெற்றோர்.. மருத்துவ மாணவர் எடுத்த விபரீத முடிவு!

 
விருதுநகர்

விருதுநகர் விக்னேஷ் காலனியில் வசித்து வருபவர் ஆனந்தராஜ் (வயது 48). இவர் ஆஸ்பத்திரியும், விருதுநகர் அக்ரஹாரம் தெருவில் மருந்து கடையும் நடத்தி வருகிறார். இவருடைய மூத்த மகன் லோகேஷ் (22). இவர் கடந்த ஜூன் மாத இறுதியில் கிர்கிஸ்தான் நாட்டில் இருந்து தாயகம் திரும்பினார். லோகேஷ் இவர் கிர்கிஸ்தான் நாட்டில் உள்ள ஜாலாலாபாத் பல்கலைக்கழகத்தில் 3-ம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார். இந்தியா திரும்பிய அவருக்கு நேற்று (10ம் தேதி) பிறந்த நாள் ஆகும். 

இதனால் தனது பிறந்தநாளை நல்ல முறையில் கொண்டாட வேண்டும என்று லோகேஷ் ஆசைப்பட்டுள்ளார். இது குறித்து கடந்த 9ம் தேதி தனது பெற்றோரிடம் ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் லோகேஷின் தாயார் பிறந்தநாளை எளிமையாக கொண்டாடலாம் என்று கூறியதாக தெரிகிறது.

தற்கொலை

இதனால் விரக்தியடைந்த லோகேஷ், நேற்று முன்தினம் இரவு தனது தந்தை நடத்தி வரும் மருந்து கடைக்கு சென்றுள்ளார். அங்கு யாருக்கும் தெரியாமல் அதிக எண்ணிக்கை கொண்ட தூக்க மாத்திரை அட்டைகளை எடுத்துச் சென்றுள்ளார். 

பின்னர் தந்தையின் மருத்துவமனைக்கு சென்ற லோகேஷ், தூக்க மாத்திரைகளை அங்கேயே சாப்பிட்டு தனக்கு மயக்கம் வருவதாக ஆஸ்பத்திரியில் இருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்தவர்கள், லோகேஷின் சட்டைபையை ஆராய்ந்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

அதில் இருந்த தூக்க மாத்திரை அட்டைகள் காலியாக இருந்ததால் உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இருப்பினும் லோகேஷ் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை பரிதாபமாக இறந்தார். 

அதிர்ச்சி!! சினிமா பாணியில் ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை!!

இது குறித்து இது பற்றி லோகேஷின் தந்தை ஆனந்தராஜ் பேரில் விருதுநகர் மேற்கு போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்குபதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெளிநாட்டில் இருந்து விடுமுறையை கழிக்க தாயகம் வந்த மருத்துவ மாணவர், அவரது பிறந்த நாளன்று உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மகனின் பிறந்தநாளே இறந்த நாளாகிவிட்டதே என்று பெற்றோர் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

From around the web