அதிர்ச்சி! கவர்னரின் தனிச் செயலாளருக்கு படுகாயம்! மோதிய வேகத்தில் தப்பித்த மோட்டார் சைக்கிள் இளைஞன்!

 
ஆம்புலன்ஸ்

புதுச்சேரி கவர்னர் மாளிகையில், தனி செயலாளராக பணிபுரிந்து வரும் கலிய மூர்த்தி என்பவரை, பின்னால் இருந்து வேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளாக்கி, நிற்காமல் அதே வேகத்தில் தப்பித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. புதுச்சேரி அரும்பார்த்தபுரத்தை அடுத்த முத்துபிள்ளை பாளையம் புதுநகரில் வசித்து வருபவர்  கலியமூர்த்தி. இவருக்கு வயது 52. 

போலீஸ்

கலியமூர்த்தி அரும்பார்த்தபுரம் மேம்பாலம் வழியாக தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, அதே வழியில் பின்னால் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர், கலியமூர்த்தி சென்ற மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டு, நிற்காமல் வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்று விட்டார்.

மோட்டார் சைக்கிள் மோதிய வேகத்தில் கலியமூர்த்தி தூக்கி வீசப்பட்டார். இதில் காயமடைந்த கலிய மூர்த்தியைப் பார்த்து பின்னால் வந்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்து, கலிய மூர்த்தியை மீட்டு, புதுவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

போலீஸ்

அங்கு கலியமூர்த்தி தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து வடக்கு பகுதி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் விபத்து ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றது யார் என்பது குறித்தும் கண்டறிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web