அதிர்ச்சி! பானிபூரி சாப்பிட்ட 100 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு! மருத்துவமனையில் அனுமதி!

 
பானிபூரி

பானிபூரி சாப்பிட்ட 100க்கும் அதிகமானோர் திடீரென்று வாந்தி, வயிற்றுப்போக்கு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் மேற்குவங்க மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பானிபூரி பிடிக்காத நபர்களே இல்லை என்ற அளவுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் அதை விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். எனவே எங்கு பார்த்தாலும் பானிபூரி கடைகள் நிறைந்து காணப்படுகிறது.

பானி பூரி

ஹ¨க்ளி மாவட்டத்தில் சுகந்தா கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட டோகாசியா பகுதியில் சாலையோர கடைகளில் பானி பூரி விற்பனை மிகவும் ஜோராக நடைபெறுவது வழக்கம். ஒரு குறிப்பிட்ட பானிப்பூரி கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் ரசித்து, ருசித்து பானிபூரி சாப்பிட்டனர். திடீரென்று அவர்களில் பலருக்கும் திடீரென்று வாந்திம், வயிற்றுப் போக்கும் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திடீரென்று வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டது எப்படி என்பது குறித்து ஆய்வு நடந்து வருகிறது. அவர்கள் சாப்பிட்ட பானிபூரியால் தான் உடல் உபாதை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பானிபூரி

பானிபூரியில் ஊற்றப்படும் நீர் சுத்தமானதாக இருந்ததா என்றும் சுகாதாரத்துறையின் சிறப்பு குழு ஆய்வு செய்து வருகிறது. சமீப காலமாக பானிபூரியில் கலக்கப்படும் தண்ணீர் மூலமாக காலரா உள்ளிட்ட உடல் உபாதைகள் வருகிறது என்று கூறி பல இடங்களில் பானி பூரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web