அதிர்ச்சி! ரோப் காரில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை!
யாரும் எதிர்பாராத நேரத்தில் ரோப் காரில் இருந்து கீழே குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இந்த அதிர்ச்சி சம்பவம் அமெரிக்காவில் அனக்னீஸ்டா என்ற பூங்காவில் நிகழ்ந்தது. அந்த பூங்காவில் இருந்த ரோப் காரில் 40 அடி உயரத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென்று அதிலிருந்து இளம் பெண் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
உலகம் முழுவதுமே இந்த கொரோனா காலம் மனிதர்களுக்கு அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார்கள் மனோ தத்துவ நிபுணர்கள். எந்த பிரச்சினைக்கும் தற்கொலை என்பது தீர்வு இல்லை என்பதை மனிதனின் மனம் எப்போது உணரும் என்பது கேள்விக்குறியாகவே நீடித்து வருகிறது.
Anakeesta theme park chair lift accident leaves woman dead after she 'fell up to 40ft' from Gatlinburg, Tennessee ride. A WOMAN has been found dead under a chairlift at Anakeesta Theme Park in Gatlinburg, Tennessee, after she fell up to 40ft, witnesses https://t.co/semieuERUj
— foxbulletin (@foxbulletin1) July 29, 2022
அமெரிக்காவின் டென்னிசி மாகாணம் ஹட்லிங்பெர்க் நகரில் அனக்னீஸ்டா என்ற இடத்தில் என்ற பொழுதுபோக்கு பூங்கா ஒன்று அமைந்துள்ளது. இந்த பூங்காவின் சிறப்பம்சமாக ரோப் கார் வசதி செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் ரோப் காரில் ஏறி இயற்கை எழிலை சுற்றிப் பார்ப்பது வழக்கம்.
இந்நிலையில் நேற்று ரோப் காரில் தனியாக ஒரு பெண் மட்டும் தனியாக பயணித்த நிலையில், 40 அடி உயரத்தில் ரோப் கார் சென்று கொண்டிருந்தது. திடீரென்று அந்த இளம்பெண் ரோப் காரில் பிரத்யேகமாக போடப்பட்டு இருந்த பாதுகாப்பு கம்பிகளை அகற்றிவிட்டு கீழே குதித்தார்.
இதில் படுகாயமடைந்த இளம் பெண் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதை பார்த்த சக பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இளம்பெண் ரோப் காரில் இருந்து குதித்தது குறித்து பூங்கா நிர்வாகத்திற்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
விரைந்து வந்த போலீசார், இளம் பெண்ணின் உடலை மீட்டனர். தற்கொலை செய்து கொண்ட இளம் பெண் யார்? எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இயற்கை எழிலை பார்க்க வந்த பெண்கள், குழந்தைகள் என அனைவரும் இந்த அசம்பாவிதத்தை பார்த்தது முதல் மன உளைச்சலில் இருக்கிறார்கள். பூங்காவில் ரோப் காரில் சென்ற இளம் பெண் திடீரென்று குதித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?