சென்னையில் அதிர்ச்சி! தலைக்கேறிய போதையில் 30 இளம்பெண்கள்! பாதுகாப்பாக மீட்டு, வீட்டுக்கு அனுப்பி வைத்த போலீசார்!

 
போதையில் பெண்கள் நடனம்

மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு... இந்த வாக்கியத்தை எங்கேயோ படித்த மாதிரி இருக்கிறதா? பார்ட்டிகளில் ஒரு பியர் குடிப்பதெல்லாம் தவறில்லை என்றும் பியர் குடிப்பதெல்லாம் சோஷியம் ட்ரிங் என்கிற சமூகத்தில் வாழ்ந்து  கொண்டிருக்கிறோம். டாஸ்மாக் கடைகளில் வாங்கலாம். கடை வாசலிலோ, அருகில் உள்ள மறைவிடங்களிலோ குடிமகன்கள் குடிக்கலாம் என்பது எழுதப்படாத சட்டமாகவே உள்ளது. 

சென்னையில் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதுமே இரவு 10  மணிக்கு மேல் பார்களில் மது விருந்து நடத்தக்கூடாது என்கிற கட்டுப்பாடு இப்போதும் நடைமுறையில் உள்ளது.  மேலும் 10 மணி வரை செயல்படுகின்ற பார்களிலும் நடன நிகழ்ச்சிகளை நடத்தவும் தடை உள்ளது. 

போதையில் பெண்கள் நடனம் ஆபாசம்

ஆனால் சென்னையில் பல இடங்களில் பார் வசதியுடன் கூடிய தனியார் விடுதிகளில் ரகசியமாக இளைஞர்களையும், இளம்பெண்களையும் கவர்ந்திழுக்க தடையை மீறி நள்ளிரவு வரையில்... ஏன் சில பார்களில் விடிய விடியவும் மது விருந்தும், அரைகுறை ஆடையுடன் நடன நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை அண்ணா சாலையை ஒட்டியுள்ள ராயப்பேட்டை ஜெனரல் பேட்டர்ஸ் சாலையில் பார் வசதிகளுடன் செயல்பட்டு வந்த தனியார் விடுதி ஒன்றில், நள்ளிரவில் மது விருந்துகளுடன் பெண்கள் அரைகுறை ஆடைகளுடன் ஆபாச நடனம் ஆடிக் கொண்டிருப்பதாக அண்ணாசாலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த விடுதியில் அதிரடியாக சோதனை நடத்தி அதிர்ந்து போனார்கள். 30க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் தங்களின் ஆண் நண்பர்களுடன். தலைக்கேறிய மது மயக்கத்தில், அந்த பாரில் இசைக்கப்பட்ட இசைக்கு ஏற்ப அரைகுறை ஆடைகளுடன் தங்களது ஆண் நண்பர்களைக் கட்டிப் பிடித்தப்படி ஆபாசமாக நடனமாடி கொண்டிருந்தனர்.   உடனடியாக அங்கு இசைத்துக் கொண்டிருந்த ஆடியோவை நிறுத்திய போலீசார், சுய நினைவின்றி நடனமாடிக் கொண்டிருந்த 30 பெண்களையும் மீட்டனர். போதையில் இருந்த இளம்பெண்களின் முகவரி, செல்போன் எண்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களை எச்சரித்து ஆட்டோவில் போலீசார் பாதுகாப்புடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். 

போதையில் பெண்கள் நடனம்

பின்னர் அங்கு இருந்த வாலிபர்களையும் கடுமையாக எச்சரித்து அனுப்பினார்கள்.தடை செய்யப்பட்ட நள்ளிரவு நடன மதுவிருந்துக்கு ஏற்பாடு செய்த தனியார் விடுதி உரிமையாளர், மேலாளரை போலீஸ் நிலையத்துக்கு வந்து விளக்கம் அளிக்குமாறு போலீசார் கூறிவிட்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அண்ணாசாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தடை செய்யப்பட்ட இரவு நடன விருந்து நடத்திய தனியார் விடுதி நிர்வாகம் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web