மீண்டும் அதிர்ச்சி! ஒரு தலைக் காதலால் இளம் பெண் கழுத்தறுத்து கொலை!

 
விஷ்ணு பிரியா

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில், ஒரு தலைக் காதலால் மூன்றாமாண்டு கல்லூரி மாணவி ரயிலில் தள்ளி விடப்பட்டு கொலைச் செய்யப்பட்ட சுவடே மறைவதற்குள் கேரள மாநிலம் கண்ணூரில்காதலிக்க மறுத்த இளம் பெண்ணை, ஒரு தலையாய் காதலித்து வந்த இளைஞர் கழுத்தறுத்து கொலை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பானூர் பகுதியில் வசித்து வருபவர் வினோத். இவரது மனைவி பிந்து. இந்த தம்பதியரின் மகள் விஷ்ணு பிரியா(23). இவர் தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் இளம் பெண் விஷ்ணு பிரியாவும் அதே பகுதியைச் சேர்ந்த ஷ்யாம்ஜித் என்ற இளைஞரும் நட்பாக பழகி வந்துள்ளனர். நட்பாக பழகிய ஷியாம்ஜித்துக்கு நாளடைவில் விஷ்ணு பிரியா மீது காதல் ஏற்பட்டுள்ளது. அவர் விஷ்ணுபிரியாவிடம் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

madumitha

நண்பனாக பழகி வந்த இளைஞனை காதலனாக விஷ்ணு பிரியா ஏற்றுக் கொள்ள மறுத்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து பல முறை தன்னைக் காதலிக்குமாறு வற்புறுத்தியும் விஷ்ணு பிரியா, காதலை நிராகரித்துள்ளார். இந்நிலையில், விஷ்ணு பிரியா, நேற்று மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டில் இருப்பதைத் தெரிந்து கொண்ட சியாம்ஜித், விஷ்ணு பிரியாவின் வீட்டிற்குச் சென்றுள்ளார். வீட்டிலும், விஷ்ணுபிரியாவின் தனது காதலை ஏற்றுக் கொள்ள சொல்லி கேட்டுள்ளார். விஷ்ணு பிரியா, மறுத்து விட்டு, கோபமாக வீட்டை விட்டு வெளியே போக கூறியதால், ஆத்திரமடைந்த சியாம்ஜித் சுத்தியலால் விஷ்ணு பிரியாவின் தலையில் முரட்டுத்தனமாக தாக்கியுள்ளார்.

எதிர்பாராத இந்த தாக்குதலினால், விஷ்ணு பிரியா மயங்கி கீழே விழுந்ததும், தன் கையில் வைத்திருந்த கத்தியால் விஷ்ணு பிரியாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் சியாம்ஜித். அதே இடத்தில் சரிந்து ரத்த வெள்ளத்தில் விஷ்ணு பிரியா, உயிரை விட்டுக் கொண்டிருந்த நிலையிலும் சியாம்ஜித், வெறி அடங்காமல், விஷ்ணு பிரியாவின் கால்கள் இரண்டையும் கத்தியால் வெட்டி உள்ளார். அதன் பின்னர் விஷ்ணு பிரியாவின் மூச்சு கடைசியாக அடங்குவதைப் பார்த்து, உயிரிழந்ததை உறுதி செய்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த தன் மகளை கண்ட தாயார் அதிர்ச்சியில் அலறியுள்ளார். தாயாரின் அலறல் சப்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும், தடயவியல் நிபுணர்களும் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

kannur

இந்நிலையில் இளம்பெண்னின் செல்போனை போலீசார் கைப்பற்றி சோதனை செய்த போது கொலை நடப்பதற்கு மூன்று நிமிடங்களுக்கு முன்பு கடைசியாக அவர் ஒருவருக்கு போன் செய்து இருப்பது தெரிய வந்தது. அந்த போன் நம்பரை தொடர்பு கொண்டு போலீசார் பேசிய போது, அந்த நபர், விஷ்ணு பிரியா தன்னை தொடர்பு கொண்டு தனது வீட்டுக்கு சியாம்ஜித் வந்துள்ளதாக கூறி விட்டு போனை துண்டித்து விட்டார் என்று கூறியுள்ளார்.

இத்தகவலின் அடிப்படையில், தடயவியல் நிபுணர்கள் தீவிர விசாரணை நடத்தினர். கொலை நடைபெற்ற 3 மணி நேரத்தில் கொலை செய்த இளைஞன் ஷியாம்ஜித் தானாகவே முன் வந்து போலீசில் சரணடைந்தார். தனது காதலை ஏற்க மறுத்ததால் இளம்பெண்ணை கொலை செய்ததாக அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web