அதிர்ச்சி வீடியோ!! விசாரணை கைதியிடம் கொடூரத் தாக்குதல் நடத்தும் போலீசார்!!

 
கொடூர தாக்குதல்

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை போலீசார் கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட 3 போலீசார் இடைநீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

போலீசாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் நபர்களில் சிலர் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். காயம், படுகாயம் என உச்சகட்டமாக உயிரிழப்பும் நடந்துவிடுவது பொது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் உருவாக்கிவிடுகிறது. இதற்கு எந்த நாடும் விதிவிலக்கல்ல என்பதை தற்போது நடந்தேறியுள்ள ஒரு சம்பவம் நிரூபித்துள்ளது.

கொடூர தாக்குதல்
யுஎஸ்ஏ டுடே என்ற பிரபல செய்தித்தாளில் ஒரு திடுக்கிடும் செய்தி வெளியாகியுள்ளது. அதில், ஆர்கன்சாசில் உள்ள க்ராபோர்ட் கவுண்டி இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. போலீசாருக்கு மல்பெரி கன்வீனியன்ஸ் ஸ்டோரில் இருந்து ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில், ஸ்டோருக்கு வந்த ஒரு நபர் அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு மிரட்டல் விடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற 3 போலீசார், புகார் கூறப்பட்ட அந்த நபரை கைது செய்யும்போது கொடூரமாக தாக்கியுள்ளனர். இது குறித்து வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. மிரட்டலான அஅந்த வீடியோவில் 3 போலீசாரும், கைது செய்யப்பட்ட ஒரு நபரை தலையில் பலமுறை குத்துவதையும் முட்டியால் தாக்கும் காட்சிகளும் பதிவாகி இருந்தது.


அங்கு நடந்து கொண்டிருந்த காட்சிகளை ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்வதை 3 போலீசில் ஒருவர் பார்த்துவிடுகிறார். இதனால் ஆத்திரமடைந்த போலீஸ் அதிகாரி ஒருவர், வீடியோவை பதிவு செய்வதை நிறுத்துமாறு மிரட்டல் விடுக்கும் காட்சிகளும் பதிவாகி உள்ளது. வீடியோ வைரலானதை தொடர்ந்து 3 போலீஸ் அதிகாரிகளும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.அமெரிக்காவில் ஏற்கனவே துப்பாக்கி கலாச்சாரம், கருப்பர்கள் மீது அமெரிக்கர்கள் நடத்தும் கண்மூடித்தனமான சம்பவங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் அமெரிக்க மக்களை அச்சமடைய செய்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web